- ஸ்ரீரங்கம் கிளை
31-03-2024 அன்று ஸ்ரீரங்கம் கிளை பொதுக்குழு கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.ஜெகன்னாதன் தலைமையில் நடைபெற்றது. கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஏ.ஆர்.சம்பத் ஆண்டறிக்கையை வாசித்தார். கிளை வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.நாகராஜன் சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு கிளை, மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிளை மகளிர் அணி செயலாளர் ஸ்ரீமதி.என்.ஜெயலலிதா நன்றி கூறினார்.
10-04-2024 அன்று குரோதி வருட பஞ்சாங்க படனம் மற்றும் பஞ்சாங்கம் வெளியீட்டு விழா கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.ஜெகன்னாதன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ.ஏ.ஆர்.சம்பத் முன்னிலையில் ஸ்ரீ.கோபாலகுட்டி சாஸ்திரிகள், ஸ்ரீ.கிருஷ்ணகுமார் வாத்யார், சாமா ஸ்ரீ.பார்த்தசாரதி பஞ்சாங்கத்தை வெளியிட்டு பஞ்சாங்க பலன்களை விளக்கினார். கிளை மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.என்.ஜெயலலிதா நன்றி கூறினார்.
திருச்சி மாவட்டம் - பொன்மலை கிளை
14-03-2024 பொன்மலை கிளையில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரம், கந்தசஷ்டி கவச பாராயணம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கிளை நிர்வாகக்குழு கூட்டம், செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் துவங்கியது. கிளைத் தலைவர் ஸ்ரீ.பி.எஸ்.எஸ்.கண்ணன் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.ராமதாஸ் ஆண்டறிக்கை வாசித்தார். கிளை பொருளாளர் ஸ்ரீ.பாலசுப்ரமணியன் 2023-2024ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்கு சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றார். மாவட்டத் தலைவர் பிராமண சேவா விபூஷண் ஸ்ரீ.என்.நாகராஜன் மாநில துணைத் தலைவர் ஸ்ரீ.ஏ.ஆர்.சம்பத் மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன் ஸ்ரீரங்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஜெகந்நாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் கிளை ஆலோசகர் ஸ்ரீ.எஸ்.சுந்தரேசன் கௌரவித்தார். கிளை துணைத் தலைவர் ஸ்ரீ.எல்.ராமநாதன், கிளை இளைஞர் அணி செயலாளர் ஸ்ரீ.எஸ்.ரமேஷ் கிளை மகளிர் அணி செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.லதா ஆகியோர் சங்க செயல்பாடுகள் பற்றி தெரிவித்தனர். 80 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை கௌரவிப்பது என தீர்மானிக்கப்பட்டது. வியாபாரிகள் சங்க பிரதிநிதி ஸ்ரீ.மெய்யப்பன் கௌரவிக்கப்பட்டார்.
குரோதி வருட பஞ்சாங்க படனம் ஸ்ரீ.குணசீலன் ஸ்தானிகர், ஸ்ரீ ஸ்ரீலட்சுமி நாராயணன் பூஜைகள் செய்தனர். ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் பஞ்சாங்க பலன்கள் பற்றி தெரிவித்தார். கிளை பொருளாளர் ஸ்ரீ.பாலசுப்ரமணியன் நன்றி கூறி ஸ்வஸ்தி வாசகம் தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
திருச்சி மாவட்டம் - ஜெயஸ்ரீகார்டன் கிளை
14-04-2024 அன்று தாம்ப்ராஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவின்படி பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பது என தீர்மானித்து ஸ்ரீ.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நல்லாட்சி அமைந்திட கிளைத் தலைவர் ஸ்ரீமதி.பத்மா வாசுதேவன், ஸ்ரீமதி.பானுமதி, ஸ்ரீமதி.விஜயா, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மேலஅடையவளஞ்சான் மேலூர் பகுதிகளில் வீடுவீடாக சென்று பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக படிப்புரை மேற்கொண்டனர்.
16-04-2024 அன்று ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேரை முன்னிட்டு விஸ்வ ஹிந்து பரிக்ஷத்துடன் இணைந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கிளைத் தலைவர் ஸ்ரீமதி.பத்மாவதி, ஸ்ரீமதி.விஜயா, ஸ்ரீமதி.பானுமதி மற்றும் பல நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
17-04-2024 அன்று ஸ்ரீராம நவமியை முன்னிட்டு கிளைத் தலைவர் ஸ்ரீமதி.பத்மா வாசுதேவன் தலைமையில் அனைவரும் இன்புற்று இருக்க “அகண்ட நாம பாராயணம்” நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம்
08-04-2024 அன்று தாம்ப்ராஸ் நல அறக்கட்டளையின் சார்பில் திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் மண்டல பிரம்மோற்சவம், பங்குனி பெருவிழா சமயபுரம் மாரியம்மன் ஜோதிட ஆராய்ச்சி நிலைய நிறுவனர் ஸ்ரீ.டி.என்.ஸ்வாமிநாதய்யர் பூஜை செய்து துவக்கி வைத்தார். திருத்தேர் உற்ஸவத்தை முன்னிட்டு பந்தல் அமைத்து நீhமோர், பானகம் பக்தகோடிகளுக்கு வழங்கப்பட்டது. டிரஸ்ட் சேர்மன் ஸ்ரீ.என்.நாகராஜன், டிரஸ்டி ஸ்ரீ.எஸ்.பாஸ்கரன் மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.என்.ஜெயலலிதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகளிர்கள் அனைவரும் கும்மியடித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை மாநில மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.பிரபாவதி ஸ்ரீனிவாசன், மாநில மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா, ஸ்ரீரங்கம் மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.ஜெயந்தி, ஸ்ரீமதி.எஸ்.வெங்கடலக்ஷ்மி, ஸ்ரீமதி.ஜி.ஜமுனா, ஸ்ரீமதி.ஜி.கண்மணி, ஸ்ரீமதி.எச்.விஜயா, ஸ்ரீமதி.எஸ்.ஜெயலலிதா நிழ்ச்சி ஏற்பாடு செய்து சிறப்பித்தனர். அறக்கட்டளை நிதி அறங்காவலர் ஸ்ரீ.ஆர்.கோவிந்தன் நன்றி தெரிவித்தார்.
|