கூத்தப்பாக்கம் கிளை
14-04-2024 அன்று கூத்தப்பாக்கம் கிளையின் பொதுக்குழு கூட்டம் மற்றும் குரோதி வருட பஞ்சாங்க படனம் நிகழ்ச்சி கிளைத் தலைவர் ஸ்ரீ.ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ.விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீ.நடராஜ ஐயர் பூஜை செய்து குரோதி வருட பஞ்சாங்கம் வாசித்தார். ஸ்ரீ.சம்பத் ஐயங்கார் கடவுள் வாழ்த்து, வேத கோஷம் வாசித்தார். கிளை பொதுச் செயலாளர் சங்க உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதி மொழியேற்றனர். கிளை துணைத் தலைவர் ஸ்ரீ.ராஜகோபாலன் வரவேற்புரையாற்றினார். கிளைத் தலைவர் உரையில் குரோதி வருட பஞ்சாங்க விளம்பரம் மற்றும் இதர குறிப்புகள் பெற்று தயாரித்தற்கு வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தார் மாநில செயலாளர் லையன் ஸ்ரீ.கே.திருமலை சிறப்புரையாற்றினார். கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.பிரணதார்த்திஹரன், ஆண்டறிக்கை வாசித்தார். கிளை பொருளாளர் ஸ்ரீ.கணேசன் 2023-2024ம் ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். பாராளுமன்ற தேர்தலில் நம் சமூகத்தினர் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வலியுறுத்தினார். ஸ்ரீ.நடராஜ ஐயர், ஸ்ரீ.ராமநாத சாஸ்திரிகள், ஆடிட்டர் ஸ்ரீ.கணேசன், ஸ்ரீ.ராஜகோபாலன், ஸ்ரீ.வெங்கட்ராமன், ஸ்ரீ.வேங்கடநாதன், ஸ்ரீ.கணேசன், ஸ்ரீ.ஜெகன்னாதன், ஸ்ரீ.சம்பத் ஐயங்கார், ஸ்ரீ.எஸ்.ஆர்.சுரேஷ், ஸ்ரீ.பக்தவச்சலம், ஸ்ரீ.பாலகுரு ஐயர், லயன் ஸ்ரீ.கே.திருமலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். ஸ்ரீ.சந்திரசேகரன், ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ.ராமகிருஷ்ணன், ஸ்ரீ.ராமமூர்த்தி, ஸ்ரீ.ஸ்ரீவத்சன், ஸ்ரீ.பாலசுப்ரமணியன், ஸ்ரீ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருத்துக்கள் தெரிவித்தனர். கிளை இணைச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.ஆர்.சுரேஷ் நன்றி தெரிவிக்க ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.
கடலூர் மாவட்டம் - நெய்வேலி கிளை
கிளையில் கடந்த 06.04.2024 முதல் கிளையின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் ஸ்ரீ குரோதி வருஷ பஞ்சாங்கம் இல்லம் தேடி வழங்கப்பட்டது. பஞ்சாங்கத்துடன் சங்க பெயரில் துணிப்பை பூநூர்ல இரண்டு செட் திருமாங்கர்லய சரடு இரண்டு செட் நோன்பு சரடு நான்கு இரட்டை பில் பவித்ரம் இரண்டு தர்ப்பணத்திற்கு தர்ப்பை ஒரு கட்டு இவை அனைத்தும் வழங்கப்பட்டன. கிளைப் பொதுச் செயலாளர் ஸ்ரீ.கிருஷ்ணன் மற்றும் பலரும் உடன் இருந்தனர். ஏற்பாட்டினை கிளைத் தலைவர் ஸ்ரீ.நாராயணன் சாஸ்திரி சிறப்பாக செய்திருந்தார்.
கடலூர் மாவட்டம் - பண்ருட்டி கிளை
கிளையில் கடந்த 14.04.2024 அன்று தமிழ் புத்தாண்டினையொட்டி சத்தியமூர்த்தி தெரு ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி சன்னதியில் மாலை கிளைத் தலைவர் ஸ்ரீ.வெங்கடேசன் தலைமையில் ஸ்ரீ குரோதி வருஷ பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும் கடந்த 22-04-2024 அன்று பண்ருட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலய ப்ரம்மோற்ஸவம் மற்றும் பகல் உற்சவம் கிளையின் சார்பாக வெகு விமரிசையாக நடைபெற்றது. மேற்படி நிகழ்ச்சிகிளில் கிளை நிர்வாகிகள் மற்றும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களும் ஸஹ குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஆஸிகளைப் பெற்றனர். விழா ஏற்பாட்டினை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
கடலூர் மாவட்டம் - மஞ்சக்குப்பம் கிளை
13-04-2024 அன்று மஞ்சக்குப்பம் கிளை சார்பாக குரோதி வருட பஞ்சாங்க படனம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கினார். ஸ்ரீ.ரகு வாத்தியார் பூஜை செய்து குரோதி வருட பலன்கள் குறித்து விளக்கினார். கடலூர் சங்கரமட செயலாளர் ஸ்ரீ.ராமகிருஷ்ணன் வாழ்த்துரையாற்றினார். ஸ்ரீ.மோகன கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ.ராமன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
கடலூர் மாவட்டம் - காட்டுமன்னார்கோவில் கிளை
11-04-2024 அன்று காட்டுமன்னார் கோவில் கிளை சார்பாக குரோதி வருட பஞ்சாங்க படனம் நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் ஸ்ரீ.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.வெங்கடேஷ், கிளை பொருளாளர் ஸ்ரீ.வேங்கடகணபதி, இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.மணிகண்டன், மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.மஹாலட்சுமி, கிளை இணைச் செயலாளர் ஸ்ரீ.குருபிரசாத், ஸ்ரீமதி.லலிதாமணி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உறுப்பினர் இல்லங்களுக்கு நேரடியாக சென்று குரோதி வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பஞ்சாங்கம் வழங்கப்பட்டது.
|