பேட்டை கிளை
07-04-2024 கிளையின் கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.பி.சுந்தரராஜன் வரவேற்புரையாற்றினார். கிளை பொருளாளர் ஸ்ரீ.ஜி.சுப்பிரமணியன் வரவு செலவு கணக்கினை சமர்பித்தார். இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.கே.முரளிபட்டர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்தார். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 14-04-2024 அன்று கிளையின் சார்பாக குரோதி வருட விஷுக்கனிக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீ.என்.கணேசன், ஸ்ரீ.சுந்தர்கணேஷ், ஸ்ரீ.நரசிம்மன், ஸ்ரீ.ராமசாமி, ஸ்ரீமதி.ஆர்.கோமதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா நன்றியுரையாற்றினார்.
|