மாவட்ட அமைப்பின் அவசர சிறப்புக் கூட்டம் கடந்த 20.04.2024 அன்று பாபு தியேட்டர் தெருவிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பாலாஜி ஐயர் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.நாகராஜன் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.சுரேஷ் மற்றும் பல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கிளைகள் மாநில அமைப்பிற்கு அனுப்ப வேண்டிய மாநில வருஷ சந்தா தொகையினை வசூலித்து அனுப்பவும் தாம்ப்ராஸ் மாத இதழுக்கான சந்தா தொகையினை கணிசமான எண்ணிக்கையில் அனுப்பவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டத்தில் இயங்காமல் உள்ள கிளைகளை புனருத்தாரணம் செய்வித்து புதிய நிர்வாகிகளை நியமிப்பது எனவும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
|