13-04-2024 அன்று பயனீர் எஸ்டேட்டில் மாவட்டத் தலைவர் கயிலை ஸ்ரீ.முரளிதரன் ஐயர் தலைமையில் தேசீய ஜனநாயக கூட்டணி ஈரோடு பாராளுமன்ற தொகுதி த.மா.க. வேட்பாளர் ஸ்ரீ.விஜயகுமார் அவர்களுக்கு மாவட்ட அளவில் அன்னாருக்கு நம் சமுதாய ஓட்டளித்து வெற்றி பெறச் செய்வோம் என நேரில் சென்று நம்பிக்கையையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர். மேற்படி சந்திப்பில் மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.சாம்பசிவ சிவாச்சாரியார் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.அஸ்வின் பாலாஜி மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.முரளி ஐயங்கார் குமாரபாளையம் கிளை பொருளாளர் ஸ்ரீ.மோகன் கிளை இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.பாலாஜி சிவம் மற்றும் பலரும் கலந்து கொண்டு ஊக்குவித்தனர். மேலும் மேற்படி நிர்வாகிகளின் துணையுடன் மாவட்டம் முழுவதும் தமிழ் புத்தாண்டு ஸ்ரீ குரோதி வருஷ பஞ்சாங்கம் அனைத்து கிளைகளுக்கும் வழங்கப்பட்டன. வரும் 28.04.2024ல் குமாரபாளையம் மற்றும் பவானி ஆகிய இரண்டு கிளைகளும் இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவிற்கு அனைவரையும் அழைப்பதென தீர்மானிக்கப்பட்டது.
|