வேலூர் மாவட்டம்
வாலாஜாப்பேட்டை கிளை

25-12-2022 அன்று கிளையின் சார்பில் 600வது வார விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் 600 நிமிடங்கள் சிறப்பாக நடைபெற்றது. நவவித பக்தி என்ற தலைப்பில் 10 மணி நேரம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து உறுப்பினர்களுக்கும் சங்கல்பம் செய்து வைத்து பாராயணம் நடைபெற்றது. விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண மகிமை என்ற தலைப்பில் ஸ்ரீ.மாம்பலம் ராஜேஷ் மூர்த்தியின் பிரசங்கம் நடைபெற்றது. ஓம் பத்மினி நாட்டியாலயா குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது

வேதம் பயிலும் கிளையைச் சார்ந்த 6 குழந்தைகளுக்கு பாத பூஜை செய்து மரியாதை செய்யப்பட்டது. கிளையைச் சார்ந்த 6 மூத்த தம்பதிகளுக்கு பாத பூஜை செய்து மரியாதை செய்யப்பட்டது. ஷன்மதம் என்ற தலைப்பில் 6 தாசர்களின் கதை கிளைக் குழந்தைகளை வைத்து நாடகமாக நடித்து காண்பிக்கப்பட்டது. ஸ்ரீ ராமருக்கு லட்சார்ச்சனை அனைத்து உறுப்பினர்களாலும் செய்யப்பட்டது. வாரம் தோறும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்திற்கு தவறாமல் வருகை தந்த குழந்தைகளுக்கு ரூ.500/- ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் ஸ்ரீ.கே.கே.சி.ராஜாஸ்வாமி, மாநில மகளிரணி இணை செயலாளர் ஸ்ரீமதி.ஸ்ரீமதி பாலாஜி, மாநில இணைச் செயலாளர் ஸ்ரீ.லக்ஷ்மிநாராயணன், சோளிங்கர் கிளைத் தலைவர் ஸ்ரீ.தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் 300 பேருக்கு மேல் கலந்து கொண்டனர். தொடர்ந்து வேலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சிறப்புரையாற்றினார். கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.பாலாஜி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கிளைத் தலைவர் ஸ்ரீ.கே.ஸ்ரீதர் நன்றி தெரிவித்தார்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS