விழுப்புரம் மாவட்டம்
வளவனூர் கிளை

08-04-2024 அன்று வளவனூர் கிளைக் கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார். கிளை பொதுச் செயலாளர் ஆண்டறிக்கை வாசித்தார். கிளை பொருளாளர் வரவு செலவு கணக்கை சமர்பித்தார். உறுப்பினர் சேர்க்கை மற்றும் சங்க வளர்ச்சி நிதி பற்றி விவாதிக்கப்பட்டது. ஸ்ரீ.ஆர்.குருநாதன், ஸ்ரீ.சி.ரவிச்சந்திரன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் குரோதி வருட தெலுங்கு மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் - சங்கராபுரம் கிளை

08-04-2024 அன்று சங்கராபுரம் கிளையின் சார்பாக குரோதி வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா கிளைத் தலைவர் ஸ்ரீ.டி.எஸ்.ரவி குருக்கள் தலைமையில் நடைபெற்றது. கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.வி.ஜெயகுமார் கிளை பொருளாளர் ஸ்ரீ.என்.மகாதேவன் அறக்கட்டளை தலைவர் ஸ்ரீ.ஜி.வி.கிருஷ்ணகுமார், இணை செயலாளர் ஸ்ரீ.எஸ்.ஜெயமுருக குருக்கள், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.கே.கணபதி ஐயர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு பஞ்சாங்கம் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS