சீர்காழி தென்பாதி கிளை
09-03-2024 அன்று கிளையின் கூட்டம் ஸ்ரீ கோதண்டராமர் சன்னதியில் கிளைத் தலைவர் ஸ்ரீ.அருள் வைத்தியநாதன் தலைமையேற்று வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் கடவாசல் ஸ்ரீ.ரமணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 60 வயது பூர்த்தியான அத்தியானம் பயின்ற தகுதியான வேத பண்டிதர்களுக்கு மாநில அமைப்பு சார்பாக வழங்கும் உதவித்தொகை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, சீர்காழி முத்துச்சட்டைநாதர் வெள்ளி மஞ்சம் திருப்பணி, தாம்ப்ராஸ் உறுப்பினர் சேர்க்கை மற்றும் சந்தா வசூலிப்பது, குரோதி வருட பஞ்சாங்கம் உறுப்பினர்களுக்கு விலை இல்லாமல் வழங்க தீர்மானிக்கப்பட்டது. சீர்காழி கிளைத் தலைவர் ஸ்ரீ.தியாகராஜன் ஸ்ரீ.ஞானகணேசன், ஸ்ரீ.குருராஜன், ஸ்ரீ.வெங்கட்ரமணி, ஸ்ரீ.ஸ்ரீதர், ஸ்ரீ.பாலசந்திரன், ஸ்ரீ.சேஷாத்ரி, ஸ்ரீ.முரளி, ஸ்ரீ.சசிகோபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிளை பொருளாளர் ஸ்ரீ.பத்ரிநாராயணன் நன்றி கூறினார்
|