காவேரிப்பட்டணம் கிளை
காவேரிப்பட்டணம் நகரில் தென்பெண்ணை ஆற்றோரம் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சங்கர மடத்தின் மஹா கும்பாபிஷேகம் கடந்த 21.04.2024 அன்று நடைபெற்றது. முன்னதாக காலை கணபதி ஹோமம் மற்றும் பிற ஹோமங்களும் மாலை நாமசங்கீர்த்தன பஜனை நிகழ்ச்சியும் பரத நாட்டிய நிகழ்வும் மற்றும் இரவு உபன்யாசமும் மறுநாள் காலை மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. காவேரிப்பட்டணம் கிளை பிராமணர்கள் மற்றும் இதர சமூகத்தினர் பலரும் பங்கேற்றனர்.
|