அம்பத்தூர் கிளை
09-04-2024 முதல் 17-04-2024 வரை, அம்பத்தூர் கிளை மற்றும் ஆன்மீக சமாஜம் இணைந்து ஸ்ரீமத் “வால்மீகி இராமாயணம்” நவாஷம் உபன்யாஸம் வேளுக்குடி ஸ்ரீ.உ.வே.ரங்கநாதஸ்வாமிகள் அவர்களால் நடத்தப்பட்டது. தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 17-04-2024 அன்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஸ்ரீலெஷ்மிநாராயணன் கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஸ்வாமிநாதன் உபன்யாசதாரரை கௌரவித்தனர்.
14-04-2024 அன்று அம்பத்தூர் கிளை சார்பாக குரோதி வருட பஞ்சாங்க படனம் ப்ரம்மஸ்ரீ பரத்வாஜம் சாஸ்திரிகளால் பூஜை செய்து பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. உப தலைவர் ஸ்ரீ.மோகனகிருஷ்ணன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
|