சென்னை வடக்கு மாவட்டம்
அம்பத்தூர் கிளை

09-04-2024 முதல் 17-04-2024 வரை, அம்பத்தூர் கிளை மற்றும் ஆன்மீக சமாஜம் இணைந்து ஸ்ரீமத் “வால்மீகி இராமாயணம்” நவாஷம் உபன்யாஸம் வேளுக்குடி ஸ்ரீ.உ.வே.ரங்கநாதஸ்வாமிகள் அவர்களால் நடத்தப்பட்டது. தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 17-04-2024 அன்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஸ்ரீலெஷ்மிநாராயணன் கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஸ்வாமிநாதன் உபன்யாசதாரரை கௌரவித்தனர். 14-04-2024 அன்று அம்பத்தூர் கிளை சார்பாக குரோதி வருட பஞ்சாங்க படனம் ப்ரம்மஸ்ரீ பரத்வாஜம் சாஸ்திரிகளால் பூஜை செய்து பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. உப தலைவர் ஸ்ரீ.மோகனகிருஷ்ணன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS