தென்காசி மாவட்டத்தில் கடந்த 5, 6.04.2024 ஆகிய இரண்டு நாட்களில் தென்காசி செங்கோட்டை மேலகரம் கடையநல்லூர் சிந்தாமணி சங்கரன்கோவில் கிரிவலம்வந்த நல்லூர் கடையம் மேலப்பாவூர் கீழ்ப்பாவூர் வாசுதேவநல்லூர் ஆகிய கிளைகளுக்கும் தென்காசி மாவட்ட தலைவர் ஸ்ரீ.அய்யா மணி அவர்களும் மாநில அமைப்பு செயலாளர் திண்டிவனம் ஸ்ரீ.எல்.குமார் அவர்களும் இணைந்து ஸ்ரீ குரோதி வருஷ பஞ்சாங்கத்தினை கிளை மற்றும் மாவட்ட அமைப்பில் உள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் நேரில் சென்று வழங்கினர். கூடிய விரைவில் தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தினை கடையநல்லூரில் நடத்துவதென மாவட்டத் தலைவர் தெரிவித்தார். ஆய்க்குடி கிருஷ்ணாபுரம் கீழாம்பூர் ஆழ்பவார்குறிச்சி எலத்தூர் ஆகிய கிளைகளில் நிர்வாக அமைப்பை விரைவில் உருவாக்குவதென ஆலோசிக்கப்பட்டது. ணடிணடி சோஹோ இன்டர்நேஷனல் சாப்ட்வேர் கம்பெனின் ஊநுடீ ஸ்ரீ.ஸ்ரீதர் வேம்பு அவர்களை மாநில அமைப்பு செயலாளரும் தென்காசி மாவட்டத் தலைவரும் கடந்த 06.04.2024 அன்று நேரில் சந்தித்து தமிழ் புது வருஷ பஞ்சாங்கத்தினை வழங்கினர். அவரது உதவியாளர் ஸ்ரீ.கீர்த்திவாசன் அவர்களிடம் நமது சங்க வளர்ச்சிக்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. தென்காசி நகரில் நமது மாவட்ட அமைப்பிற்காக ஒரு இடத்தினை தகுந்த நபருடன் சிருங்கேரிக்கு நேரில் சென்று ஸ்ரீ மடாதிபதிகளை தரிசித்து விண்ணப்பித்து கேட்டுப் பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.
|