திண்டுக்கல்
நிலக்கோட்டை கிளை

18-12-2022 அன்று கிளையின் துவக்க கூட்டம் மாவட்டத் தலைவர் பழனி ஸ்ரீ.சந்திரமௌளீஸ்வர கனபாடிகள் தலைமை வகிக்க நிலக்கோட்டை ஸ்ரீ.ராஜாசிவாச்சாரியார் முன்னிலையில் நடைபெற்றது. உறுப்பினர்களின் கருத்து கேட்புக்கு பின் புதிய தலைவராக ஸ்ரீ.ராஜாசிவாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். பொதுச் செயலாளராக ஸ்ரீ.கண்ணன், பொருளாளராக ஸ்ரீ.பாஸ்கர் இளைஞரணி செயலாளராக ஸ்ரீ.கார்த்திக் இணைச் செயலாளராக ஸ்ரீ.கைலாஷ் பட்டர் மகளிரணி செயலாளராக ஸ்ரீமதி.அனுராதா பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மதுரை மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.ஜெயஸ்ரீ ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்வித்து சிறப்புரையாற்றினார். மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.காலனி ஸ்ரீ.சசிராமன், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஸ்வாமிநாதன், மதுரை பழங்காநத்தம் கிளைத் தலைவர் ஸ்ரீமதி.அன்னபூரணி. மேல்மங்கலம் கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.ராம்ஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஸ்ரீ.ஆனந்த கணேஷ் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீ.குமார் செய்திருந்தார்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS