ராணிப்பேட்டை மாவட்டம்

05-11-2023 அன்று மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் ஸ்ரீ.கே.கே.சி.ராஜாஸ்வாமி தலைமையில் நடைபெற்றது. விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில் பூஷண், தனிநபர், சிறந்த கிளை விருது பெற்றவர்களை டி.வி.எஸ்.நிறுவன நிர்வாகி ஸ்ரீ.எஸ்.துரைஸ்வாமி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும் டி.வி.எஸ். நிர்வாகி ஸ்ரீ.எஸ்.துரைஸ்வாமி தனது உரையில், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்களுக்கு தங்களது நிறுவனத்தில் மாத ஊதியம் ரூ.15000/- வேலை வாய்ப்பு வழங்கி வருவதாக கூறினார். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.கே.கே.சி.ராஜாஸ்வாமி சங்க செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மாநிலச் செயலாளர் ஸ்ரீ.ஜி.தியாகராஜன், மாநில இணைச் செயலாளர் ஸ்ரீ.லக்ஷ்மி நாராயணன், வாலாஜா கிளைத் தலைவர் ஸ்ரீ.ஸ்ரீதர், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஜி.ஸ்ரீனிவாசன் ஆகியோர் உரையாற்றினார். ஸ்ரீமதி.அருணா ராஜாஸ்வாமி கூட்டத்தினை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.  

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS