கொளத்தூர் கிளை
31-03-2024 அன்று கொளத்தூர் கிளை பொதுக்குழு மற்றும் ஐம்பெரும் விழா கிளைத் தலைவர் பிராமண சேவா பூஷண் ஸ்ரீ.கே.ஹரிஹரகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எஸ்.சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். ஸ்ரீமதி.லக்ஷ்மிகுமார், ஸ்ரீமதி.வைதேகி ஸ்ரீதர் கடவுள் வாழ்த்து பாடினார்கள். ஸ்ரீ.அருணாச்சல சாஸ்திரிகள், ஸ்ரீ.ஆதிசங்கர நாராயணன் ஆகியோர் வேதகோஷம் வாசித்தனர். கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஜி.எஸ்.மூர்த்தி வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ.ஸ்ரீதரன் பட்டாச்சாரியார் அவர்களால் ஸ்ரீ.ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடத்தப்பட்டது. தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் குரோதி வருட பஞ்சாங்கம் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். 80 வயது பூர்த்தி அடைந்த தம்பதிகளுக்கு பூஜை செய்து கௌரவப்படுத்தப்பட்டனர். கிளை பொருளாளர் ஸ்ரீ.எஸ்.பிரகாஷ்குமார் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். பள்ளி மாணவியர்க்கு கல்வி உதவித் தொகை மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சென்னை மண்டலப் பொறுப்பாளர் ஸ்ரீமதி.சுந்தரி ரங்கநாதன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஸ்ரீ.கே.ராமநாத ஐயர், வடசென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சுவாமிநாதன், மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.ராமசாமி, மாம்பலம் கிளைத் தலைவர் ஸ்ரீ.சாய்ராம், அண்ணாநகர் கிளைத் தலைவர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கல்பாக்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.சுந்தர்ராம் சாஸ்திரிகள் ஆகியோர் சிறப்புரையாற்றினார். அனைவருக்கும் குரோதி வருட பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டை இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.எஸ்.கிரீஷ், ஸ்ரீமதி.லக்ஷ்மிகுமார், ஸ்ரீமதி.வைதேகி ஸ்ரீதர், ஸ்ரீமதி.அஸ்வினி, ஸ்ரீ.ஹரி, திருச்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் ஸ்ரீ.சுதாகர், ஸ்ரீமதி.கோமதி, கிளை ஆலோசகர் ஸ்ரீ.ரமேஷ் ஆகியோர் மிகச் சிறப்பாக செய்தனர். சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் பிராமண சேவா பூஷண் ஸ்ரீ.எம்.கிருஷ்ணன் நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
மத்திய சென்னை மாவட்டம் - விருகம்பாக்கம் கிளை
07-04-2024 தாம்ப்ராஸ் விருகம்பாக்கம் கிளையின் சார்பக ஐம்பெரும் விழா கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ‘பிராமண சேவா ரத்னா’ திருவெற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் பூர்ணகும்ப மரியாதையுடன் கிளை நிர்வாகிகள் வரவேற்றனர். ஸ்ரீ.ஆர்.ரவிக்குமார் சாஸ்திரிகள் வேத கோஷம் வாசித்தார். கிளை பொதுச் செயலாளர் டாக்டர்.கே.வி.ராமநாதன் வரவேற்புரையாற்றினார்.
குரோதி வருட பஞ்சாங்கத்தை மாநிலத் தலைவர் ‘பிராமண சேவா ரத்ன’ திருவெற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் வெளியிட முதல் பிரதியை கிளை ஆலோசகர் ஸ்ரீ.ஆர்.சந்தானம் பெற்றுக் கொண்டார். லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது. சென்னை மத்திய மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எஸ்.சதீஷ்குமார், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமதி. சுந்தரி ரங்கநாதன், துணைத் தலைவர் ஸ்ரீ.சி.கே.ராமசந்திரன், மாநில போஷகர் நியூட்ரின் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
சீனாவில் நடைபெற்ற ஜுனியர் ஆசிய ரோவர்ஸ் கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்தியரும், தமிழ்நாட்டை சேர்ந்தவரும் தாம்ப்ராஸ் போஷகர் ஆடிட்டர் ஸ்ரீ.வி.விஜய் அவர்களின் மகன் சிரஞ்சீவி ஸ்ரீ.வி.அவிக்ஷித் விஜய் விஸ்வநாத் அவர்களை மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் ரோவர்ஸ் கேட்டிங் வித்தகர் எனும் விருது வழங்கி கௌரவித்தார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதன்மை மதிப்பெண் பெற்ற குமாரி.அக்ஷயா, சிரஞ்.ஆர்.சிவகார்த்திக், குமாரி,ஏ.தீப்தி, சிரஞ்.கே.ஆர்.ஸ்ரீவத்சன், சிரஞ்.என்.அனிருத், சிரஞ்.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், குமாரி.வி.ஷ்ருதி, குமாரி.வி.மீனாட்சி ஆகியோர்க்கு மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் விருது வழங்கி பாராட்டினார். கிளை நிர்வாகிகள் ஸ்ரீ.ஆர்.சந்தானம், ஸ்ரீ.டி.ஜெயகோபால், ஸ்ரீ.ஆர்.முகுந்தன், ஸ்ரீ.ஆர்.சங்கரமூர்த்தி, ஸ்ரீ.கே.வி.நாகராஜன், ஸ்ரீ.எச்.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ.எஸ்.சுந்தர், ஸ்ரீ.என்.ஜெயபிரகாஷ், ஸ்ரீ.எம்.கே.சுப்ரமணியன், ஸ்ரீ.சேஷாத்ரி நாகராஜன், ஸ்ரீ.ஆர்.ராஜகோபாலன் ஆகியோரை சங்க வளர்ச்சிக்காக பாடுபட்டதற்காக மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் விருதுகள் வழங்கி பாராட்டினார்.
ஆன்மீக நிகழ்ச்சி, திருக்கோவில் பணி மற்றும் பாராயணம் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ.மீனாக்ஷி சுந்தரம், ஸ்ரீமதி.விஜயலக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஸ்ரீ.ரவிக்குமார் சாஸ்திரிகள் ஆகியோரை மாநிலத் தலைவர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் விருதுகள் வாங்கி கௌரவித்தார். நீண்ட காலமாக சமுதாய சேவை செய்து வரும் ஸ்ரீமதி.சுந்தரி ரங்கநாதன் மற்றும் அமரர் ஸ்ரீ.கே.அருணாச்சல வாத்யார், அமரர் ஸ்ரீ.கே.கே.வேதபுரி ஆகியோர் குடும்பத்தாரிடம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாநிலத் தலைவர் ‘பிராமண சேவா ரத்னா’ ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் இனைய தலைமுறையினர் சங்க வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களையும் மகளிர் அமைப்பையும் பாராட்டி பேசினார். மேலும் நமது கலாச்சாரம் பற்றியும் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டை டாக்டர் கே.வி.ராமநாதன், ஸ்ரீ.கே.வி.நாகராஜன் ஸ்ரீமதி.ஜெயலக்ஷ்மி நாராயணன், ஸ்ரீ.சி.கே.ராமச்சந்திரன், ஸ்ரீ.ஆர்.சந்தானம், ஸ்ரீமதி.ருக்மணிராமன், ஸ்ரீ.ஆர்.முகுந்தன், ஸ்ரீ.சங்கரமூhத்தி, ஸ்ரீமதி.கமலா ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பாக செய்தனர். அமைப்பு செயலாளர் ஸ்ரீ.டி.ஜெயகோபால் நன்றி தெரிவித்தார்.
|