29-06-2025 அன்று 10 மற்றும் 12ம் (வகுப்பு) பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.கண்ணன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட உபதலைவர் ஸ்ரீ.ஜகந்நாதன், மாவட்ட ஆலோசகர் ஸ்ரீ.ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் டாக்டர்.ஆர்.நடராஜன் மாணவ, மாணவிகளை பாராட்டி அறிவுரை வழங்கினார். கரியமாணிக்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.பாலாஜி வேத நாராயணன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கார்த்திகேயன், மாவட்ட உபதலைவர் ஸ்ரீ.சேஷாத்ரி, மாவட்ட அமைப்பு செயலாளர், ஸ்ரீ.முரளிராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன், மாநில இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.மணிகண்டன், மாநில இணைச் செயலாளர், ஸ்ரீமதி.எஸ்.அனுராதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்புரையாற்றினர். ஸ்ரீமதி.எஸ்.அனுராதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்புரையாற்றினார். ஸ்ரீமதி.ப்ரியாராம் குமார் பள்ளி மாணவ, மாணவிகளை வாழ்த்து பரிசுகளை வழங்கினர். பெற்றோர்களை தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.ஆர்.கோவிந்தன் நன்றியுரையாற்றினார்.
திருச்சி மாவட்டம் - அம்மாமண்டபம் கிளை
15-06-2025 அன்று கிளையின் மாதாந்திர கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.சுதர்ஸனம் தலைமையில் நடைபெற்றது. தாம்ப்ராஸ் செயல்பாடுகள், உறுப்பினர் சேர்க்கை, தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தா பற்றி ஆலோசிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.கண்ணன், உபதலைவர் ஸ்ரீ.சேஷாத்ரி, அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.மணிகண்டன், ஆலோசகர் ஸ்ரீ.ரவி. ஸ்ரீ.டி.கே.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ ரவிசுந்தரேசன், ஸ்ரீ.நாகசுப்பிரமணியன், ஸ்ரீ.ராமநாதன், ஸ்ரீ.வி.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ.விஜயேந்திரன் மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.கோமதி, ஸ்ரீமதி.மஹாலக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீ.கண்ணன் நன்றியுரையாற்றினார்.
22-06-2025 அன்று கிளையின் சார்பாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90சதவிகிதம் மேல் மதிப்பெண் பெற்ற நம் சமூக பள்ளி மாணவ மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிளைத் தலைவர் ஸ்ரீ.சுதர்ஸனம் தலைமை தாங்கினார். கிளை உபதலைவர் ஸ்ரீ.சேஷாத்ரி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வேலுக்குடி ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணன் ஸ்வாமிகள் மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கி ஆசி வழங்கினார். கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.கண்ணன், பொருளாளர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், ஆலோசகர் ஸ்ரீ.டி.கே.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.ரவி சுந்தரேசன், ஸ்ரீ.ஆர்.ராமநாதன், ஸ்ரீ.பி.நாகசுப்ரமணியன், அமைப்பு செயலாளர் ஸ்ரீ.மணிகண்டன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி. கோமதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மாநில ஆலோசகர் ஸ்ரீ.ஓ.எப்.டி.சம்பத், மாவட்ட ஆலோசகர் புத்தூர் ஸ்ரீ.ஸ்ரீதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேளுக்குடி ஸ்ரீ.உ.வே.கிருஷ்ணன் ஸ்வாமிகள் அருளுரையில் ஆன்மீகம், கலாச்சாரம், வேளுக்குடி ஸ்வாமிகள் நடத்தும் வேதபாடசாலை, ஆன்மீகப் பணிகள் பற்றி எடுத்துரைத்தார். இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் - ஜெய்ஸ்ரீகார்டன் கிளை
29-06-2025 அன்று மாவட்டத்தின் சார்பாக நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகள் பாராட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் மாநில மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன், ஸ்ரீமதி.கலா சிறப்புரையாற்றி நிகழ்சசி ஏற்பாட்டிற்கு உதவி செய்தனர் மற்றும் 14-07-2025 அன்று கலைவாணி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெய்ஸ்ரீகார்டன் கிளைத் தலைவர் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். கிளையின் சார்பாக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருச்சி மாவட்டம் - ஸ்ரீரங்கம் கிளை
14-07-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.எஸ்.ஜெகன்னாதன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ.எஸ்.சுந்தரேசன் முன்னிலை வகித்தார். ஆடி வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டது. தாம்ப்ராஸ் உறுப்பினர் சேர்க்கை, தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிக்க விவாதிக்கப்பட்டது. ஸ்ரீ.சுந்தரேசன், ஸ்ரீ.சேஷாத்ரி, ஸ்ரீ.கே.ரெங்கராஜன், ஸ்ரீ.சுதர்சனம், ஸ்ரீமதி.ஜெயந்தி கண்ணன், ஸ்ரீமதி.என்.ஜெயலக்ஷ்மி, ஸ்ரீமதி.சித்ரா ஸ்ரீபதி, ஸ்ரீமதி.எஸ்.கல்யாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
திருச்சி மாவட்டம் - அய்யப்ப நகர் கிளை
07-07-2025 அன்று கிளையின் சார்பாக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் மாதாந்திர அனுஷம் பூஜையை கிளைச் செயலாளர் ஸ்ரீ.பி.இராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.ஜெ.இராமகிருஷ்ணன் ஆகியோர் நடத்தி வைத்தனர். நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
திருச்சி மாவட்டம் - பொன்மலை கிளை
15-05-2025 கிளையின் கூட்டம் விஷ்ணு சகஸ்ரநாமம், லெக்ஷ்மி அஸ்டோத்ரம், கந்த சஷ்டி கவசம் பாராணயம், ஆதி சங்கரர் பூஜை, சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. கிளைத் தலைவர் ஸ்ரீ.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். தாம்ப்ராஸ் செயல்பாடுகள், தாம்ப்ராஸ் மாத இதழ் பற்றி உரையாற்றினார். மாநிலத் தலைவராக போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களுக்கு நமஸ்காரம் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து அவரது தலைமையில் சிறப்பாக செயல்பட தீர்மானிக்கப்பட்டது. கிளை பொருளாளர் ஸ்ரீ.எம்.குணசீலன், ஸ்ரீ.எல்.ராமநாதன், ஸ்ரீ.லெக்ஷ்மிநாராயணன், ஸ்ரீ.வெங்கடராமன், ஸ்ரீமதி.லலிதா வெங்கடராமன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ரமேஷ், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.லதா சங்கரசுப்ரமணியன், ஸ்ரீ.ரங்கநாதன், ஸ்ரீ.சுந்தரராமன், ஸ்ரீமதி.ராதிகா, ஸ்ரீமதி.காயத்ரி, ஸ்ரீமதி.விஜயலெக்ஷ்மி, ஸ்ரீ.அனந்தராமன், ஸ்ரீ.சிவகார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏற்பாட்டினை தலைவர் ஸ்ரீ.பாலசுப்ரமணியன் செய்திருந்தார். ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
15-06-2025 கிளையின் செயற்குழு கூட்டம் ஸ்ரீ ஆதிசங்கர தியான நிலையத்தில் ஆனி மாத பிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திண்டிவனத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில உபதலைவராக ஸ்ரீ.என்.நாகராஜன், மாநில மகளிரணிச் செயலாளராக ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவசான், மாநில ஆலோசகராக ஸ்ரீ.எ.ஆர்.சம்பத், மாநில இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.ஆர்.மணிகண்டன், மாநில செயலாளராக பொன்மலை ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டனர். தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
|