திருச்சி மாவட்டம்
பொன்மலை கிளை

17-08-2025 அன்று லக்ஷ்மி அஷ்டோத்ரம், கந்தர் சஷ்டி கவச பாராயணத்துடன் கிளையின் கூட்டம் துவங்கியது. கிளைத் தலைவர் ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். கிளை செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

17-09-2025 அன்று கிளையின் கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. 12-10-2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கவிருக்கும் மாநில பொதுக்குழுவில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்கள் கூட்டத்திற்கும் ஸ்ரீ.எஸ்.ராமநாதன், ஸ்ரீமதி.மீனாக்ஷி ராமநாதன், ஸ்ரீமதி.விஜயலக்ஷ்மி, பொதுச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.ரவிச்சந்திரன், பொருளாளர் ஸ்ரீ.எஸ்.குணசீலன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.ரமேஷ், இளைஞரணி இணைச் செயலாளர் ஸ்ரீ.பரத்வாஜ், ஸ்ரீ.சிவகார்த்திகேயன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.லதா சங்கரசுப்ரமணியன், மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.காயத்ரி ரவிச்சந்திரன், ஸ்ரீ.வி.வெங்கடராமன், ஸ்ரீமதி.லதா, ஸ்ரீமதி.ராதிகா ஸ்தானிகர் ஸ்ரீ.லெஷ்மிநாராயணன், ஸ்ரீ.சுந்தர்ராஜ், ஸ்ரீமதி.அபிராமி ராதாகிருஷ்ணன், ஸ்ரீ.சிவகார்த்தி கேயன், ஸ்ரீ.அனந்தநாராயணன், ஸ்ரீமதி.ராதிகா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீ.சுந்தர்ராஜன், ஸ்ரீ.எஸ்.ராமநாதன் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.


திருச்சி மாவட்டம்

28-09-2025 அன்று நவராத்ரியை முன்னிட்டு, முப்பெரும் தேவியர் வழிபாடு, கன்யாபூஜை ஸ்லோக வகுப்புகள் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.நாகராஜன் வழிகாட்டுதலின்படி, மாவட்ட உபதலைவர் ஸ்ரீ.ஜெகந்நாதன் தலைமையில் மாவட்ட ஆலோசகர் ஸ்ரீ.ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.கண்ணன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீ.சேஷாத்ரி, மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.சேஷாத்ரி, கணபதி நகர் கிளைத் தலைவர் ஸ்ரீமதி. ஸ்ரீபிரியா, மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.சித்ரா ஸ்ரீபதி, மாநில மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன், மாநில இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.மணிகண்டன், மாநில இணைச் செயலாளர் ஸ்ரீமதி.அனுராதா மாநில ஆலோசகர் ஸ்ரீ.ஏ.ஆர்.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்லோக வகுப்பில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு ஸ்ரீ.நாராயண ஷர்மா பரிசு வழங்கினார். மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.ஆர்.கோவிந்தன் நன்றி தெரிவித்தார்.

16-10-2025 அன்று கூட்டம் நடைபெற்றது. 12-10-2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில் மாவட்டம் மற்றும் கிளை செயல்பாடுகளை பாராட்டி பிராமண சேவா விபூஷண், பூஷண் சிறந்த மாவட்ட விருது, சிறந்த கிளை விருதுகள் மற்றும் தனி நபர் விருதுகளை வழங்கிய மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களுக்கும் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.நாகராஜன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.கண்ணன், பொருளாளர் ஸ்ரீ.கோவிந்தன் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.


திருச்சி மாவட்டம் - அம்மாமண்டபம் கிளை

05-10-2025 அன்று கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.சுதர்ஸனம் தலைமையில் நடைபெற்றது. தாம்ப்ராஸ் செயல்பாடுகள் மற்றும் 12-10-2025 அன்று நடைபெற உள்ள மாநில பொதுக்குழுவிற்கு நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொண்டார். 16-11-2025 அன்று தாம்ப்ராஸ் எழுச்சி நாள் நிகழ்ச்சி நடத்த ஆலோசிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.கண்ணன், துணைத் தலைவர் ஸ்ரீ.சேஷாத்ரி, மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.கோமதி, ஆலோசகர் ஸ்ரீ.ரவி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


திருச்சி மாவட்டம் - ஜெய்ஸ்ரீகார்டன் மற்றும ஸ்ரீரங்கம் கிளை

02-10-2025 அன்று விஜய தசமியை முன்னிட்டு மாநில மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன் இல்லத்தில் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில பொதுக்குழுவில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. அனைவருக்கும் தாம்பூலம் வழங்கப்பட்டது.

03-10-2025 அன்று ஸ்ரீமதி.பத்மாவதி வாசுதேவன் பிறந்த நாளை முன்னிட்டு பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.

05-10-2025 தாம்ப்ராஸ் ஸ்ரீரங்கம் கிளையின் சார்பாக அகண்ட பாராயணத்தில் கோபகுடீரம் பஜனை மண்டலியின் பஜனை விமரிசையாக நடைபெற்றது.

12-10-2025 அன்று நடந்த மாநில பொதுக்குழுவில் கிளையின் மகளிரணி நிர்வாகிகள் மாநில மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன் அவர்களுடன் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் ஜெயஸ்ரீ கார்டன் கிளைக்கு சிறந்த செயல்பாட்டிற்கான விருதும், ஸ்ரீமதி.கலா மற்றும் ஸ்ரீமதி.ரமாமணிக்கு தனிநபர் விருதும் வழங்கப்பட்டது. மாநில அமைப்பிற்கு நன்றி தெரிவித்தனர்.

17-10-2025 அன்று ஜெய்ஸ்ரீகார்டன் கிளை உறுப்பினர்கள், ஸ்ரீமதி.சாந்தா, ஸ்ரீமதி.சுந்தரவல்லி ஆகியோருக்கு தீபாவளி திருநளை முன்னிட்டு புத்தாடை வழங்கப்பட்டது.


திருச்சி மாவட்டம் - அய்யப்ப நகர் கிளை

27-08-2025 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி பூஜையை கிளை ஆலோசகர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் மற்றும் ஸ்ரீ.ஜெ.இராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாக நடத்தி வைத்தனர். கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் தலைமையில் நிர்வாகிகள் பூஜைக்கான ஏற்பாட்டினை மேற்கொண்டனர். ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

31-08-2025 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுஷ பூஜையை கிளை ஆலோசகர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் மற்றும் ஸ்ரீ.வி.முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

07-09-2025 அன்று கிளையின் செயற்குழு கூட்டம் தலைவர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கிளையின் சார்பாக நவராத்ரி பூஜை நடத்துவது 12-10-2025 அன்று நடைபெற உள்ள மாநில பொதுக்குழுவிற்கு நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிப்பது, தீபாவளி திருநாளை முன்னிட்டு சுமங்கலிகளுக்கு புடவை, பிரம்மச்சாரிகளுக்கு வேஷ்டி வழங்குவது பற்றி தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்கு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிளை பொருளாளர் ஸ்ரீ.எஸ்.ராமகிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் இனிதாக நிறைவடைந்தது.

22-09-2025 முதல் 02-10-2025 வரை நவராத்ரி பூஜையை கிளை ஆலோசகர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் நடத்தி வைத்தார். ஸ்ரீமதி.விஜயலெக்ஷ்மி கங்காதரன் அவர்களின் பஜனை ஸ்ரீமதி.அனுராதா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பஜனை, ஸ்ரீசத்யசாய் குழுவினரின் பஜனை, கே.கே.நகர் மகளிரணியினரின் பஜனை, ஸ்ரீமதி.வஸந்தி ஸ்ரீனிவாசன் அவர்களின் வாமன அவதாரம் பற்றி உபன்யாசம் மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சரஸ்வதி பூஜையன்று கன்யா குழந்தைகளுக்கு பாவாடை சட்டை மற்றும் தாம்பூலம் வழங்கப்பட்டது.

27-09-2025 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுஷ பூஜையை கிளை ஆலோசகர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் நடத்தி வைத்தார். ஸ்ரீ.வி.முத்துகிருஷ்ணன், ஸ்ரீ.எஸ்.பாலகிருஷ்ணன் பூஜைக்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். பூஜையில் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.

01-10-2025 அன்று கிளையின் சார்பாக கன்யா பெண்களுக்கு பாவாடை சட்டை வழங்கும் நிகழ்ச்சி கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.மீனாக்ஷி சுந்தரம் வரவேற்புரையாற்றினார். 30 கன்யா பெண்களுக்கு பாவாடை சட்டை மற்றும் மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது. நிர்வாகிகள், உறுப்பினர்கள் குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாலையில் சரஸ்வதி பூஜை நடைபெற்றது. பலரும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

05-10-2025 அன்று கிளையின் சார்பாக தீபாவளி திருநாளை முன்னிட்டு சுமங்கலிகளுக்கு புடவை மற்றும் பிரம்மச்சாரிகளுக்கு வஸ்திரம் வழங்கும் நிகழ்ச்சி தலைவர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.மீனாக்ஷிசுந்தரம் வரவேற்புரையாற்றினார். 42 சுமங்கலிகள் மற்றும் 18 பிரம்மச்சாரிகளுக்கு வஸ்திரம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

12-10-2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற உள்ள தாம்ப்ராஸ் மாநில பொதுக்குழுவில் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. கிளை பொருளாளர் ஸ்ரீ.எஸ்.இராமகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS