பொன்மலை கிளை
14-04-2025 அன்று கிளையின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. விஷ்ணு சகஸ்ரநாமம், லக்ஷ்மி அஷ்டோத்திரம் கந்த சஷ்டி பாராயணம் செய்யப்பட்டது. விசுவாவசு புத்தாண்டை முன்னிட்டு ஸ்தானிதர் ஸ்ரீ.வி.லெக்ஷ்மிநாராயணன் பஞ்சாங்க பூஜைகள் செய்து, பஞ்சாங்க படனம் செய்து வைத்தார். கிளைத் தலைவர் ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். கடவுள் வாழ்த்து, வேதகோஷம், சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. கிளைத் தலைவர் உரையாற்றினார். பொதுச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஸ்ரீ.டி.குணசீலன் வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். அனைவரும் ஒப்புதளித்தனர். ஸ்ரீரங்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.ஜகன்னாதன் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.மணிகண்டன், பொன்மலை கிளையின் முன்னாள் ஆலோசகர் ப்ரும்மஸ்ரீ மஹாலிங்க சாஸ்திரிகள் ஸ்ரீமதி.சரஸ்வதி, முன்னாள் தலைவர் ஸ்ரீ.வைகுண்டமூர்த்தி, ஸ்ரீமதி.அகிலா மாநில உபதலைவர் ஸ்ரீ.ஏ.ஆர்.சம்பத், மாநில/மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினார். உபதலைவர் ஸ்ரீ.எஸ்.ராமதாஸ், ஆலோசகர் ஸ்ரீ.பி.எஸ்.எஸ்.கண்ணன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ரமேஷ், இணைச் செயலாளர் ஸ்ரீ.பரத்வாஜ், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.லதா சங்கரசுப்ரமணியன், இணைச் செயலாளர் ஸ்ரீமதி.காயத்ரி ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.ராமநாதன், ஸ்ரீ.சங்கரசுப்ரமணியன், ஸ்ரீ.லெக்ஷ்மிநாராயணன், ஸ்ரீ.வெங்கட ராமன், ஸ்ரீ.அனந்தநாராயணன், ஸ்ரீ.ராமமூர்த்தி ஸ்ரீமதி.லதா வெங்கடராமன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீ.எல்.ராமநாதன் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகம், தேசியகீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
|