குமாரபாளையம் கிளை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கிளையில் கடந்த 28-12-2025 அன்று முப்பெரும் விழா சிறப்புடன் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.மஹாதேவ சாஸ்திரி தலைமையில் கிளைத் தலைவர் ஸ்ரீ.சாம்பசிவ சிவாச்சாரியார் முன்னிலையில் விழா ஆரம்பமானது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.அஷ்வின் பாலாஜி வரவேற்றார். மாவட்ட பொதுக்குழு கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் கௌரவ தலைவர் ஸ்ரீ.சுரேஷ் பட்டர் பொருளாளர் ஸ்ரீ.மோகன் இளைஞரணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் திருச்செங்கோடு கிளைத் தலைவர் ஸ்ரீ.சதீஷ் மற்றும் உள்ளூர் பிராமணர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் மாவட்டத்திலுள்ள தற்போது வேதம் பயின்று வரும் வித்யார்த்திகளையும் அவர்தம் பெற்றோரையும் கௌரவிக்கப்பட்டது. நிகழ்வுக்குப் பின் ஜாதக பரிவர்த்தனை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் சிறப்பாக செய்திருந்தார்.
|