கடலூர் மாவட்டம்
விருத்தாசலம் கிளை

23-02-2025 அன்று கடவுள் வாழ்த்துடன் கூட்டம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைத் தலைவர் ஸ்ரீ.வி.சேகர் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளராக ஸ்ரீ.வி.எ.கே.விருத்தகிரி, பொருளாளராக ஸ்ரீ.ரங்கராஜன், மகளிரணி செயலாளராக ஸ்ரீமதி.உஷா பாலசுப்ரமணியன், இளைஞரணி செயலாளராக ஸ்ரீ.கோபி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.முத்துகிருஷ்ணன் கடலூர் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.வி.அருணாச்சலம் அகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினர். கிளை பொருளாளர் ஸ்ரீ.ரங்கராஜன் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.


கடலூர் மாவட்டம் - கூத்தப்பாக்கம் கிளை

08-03-2025 அன்று கிளையின் கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.வி.ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மற்றும் உடல் நலம் குன்றியவர்கள் பூரண நலம் பெற ஸ்ரீ மிருத்யுஞ்ஜய ஐபம் ஜெபிக்கப்பட்டது. கடவுள் வாழ்த்து, வேதகோஷம் ஸ்ரீ.பூ.சம்பத் ஐயங்கார் வாசித்தார். சங்க உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர். பொதுச் செயலாளர் ஸ்ரீ.வி.பிரணதார்த்திஹரன் வரவேற்புரையாற்றினார். விசுவாவசு பஞ்சாங்கம் கிளையின் சார்பாக உறுப்பினர்களுக்கு விநியோகம் செய்ய ஸ்ரீ.பிரகாஷம் அவர்களுக்கும், உறுதுணையாக உள்ள ஸ்ரீ.ராஜாராமன் ஸ்ரீ.கணேசன், ஸ்ரீ.ராமநாத சாஸ்திரிகள், ஸ்ரீ.பூ.சம்பத் ஐயங்கார், ஸ்ரீ.எஸ்.ஆர்.சுரேஷ் ஆகியோருக்கு பொருளாளர் ஸ்ரீ.கணேசன் நன்றி தெரிவித்தார். ஸ்ரீ.எஸ்.ஆர்.சுரேஷ், ஸ்ரீ.ஆர்.கண்ணன், ஸ்ரீ.பக்தவச்சலம், ஸ்ரீ.சங்கரன் ஸ்ரீ.பிரணதார்த்திஹரன், ஸ்ரீ.வினோத்ராம் ஆகியோருக்கும் கரகோஷம் மூலம் நன்றி தெரிவிக்கப்பட்டது. உபதலைவர் ஸ்ரீ.ராஜகோபாலன், ஸ்ரீ.லக்ஷ்மிநாராயணன், ஸ்ரீ.ராதாகிருஷ்ணன், ஸ்ரீ.சந்திரமௌலி, ஸ்ரீ.வெங்கட்ராமன், ஸ்ரீ.ஜெகந்நாதன், ஸ்ரீ.பக்தவச்சலம், ஸ்ரீ.ராமநாத சாஸ்திரிகள், ஸ்ரீ.சங்கரன் சாவடி கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.விஜயராகவன், ஸ்ரீமதி.எஸ்.அலமேலு, ஸ்ரீமதி.ஸ்ரீமதி (மதுரை), ஸ்ரீமதி.செல்வி, ஸ்ரீமதி.சித்ரா, ஸ்ரீமதி.லக்ஷ்மி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. ஸ்வஸ்தி வாசகத்திற்கு பின் ஸ்ரீ.எஸ்.ஆர்.சுரேஷ் நன்றியுரையாற்றினார்.

12-03-2025 அன்று கிளையின் சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கிளை உறுப்பினர் ஸ்ரீ.சங்கரன் (கரூர் வைஸ்யா வங்கி ஓய்வு) அவரது தாயார் ஸ்ரீமதி.வெங்கடலக்ஷ்மி, உறுப்பினர் ஸ்ரீ.என்.நடராஜன் (நீதிமன்ற பணி ஓய்வு) அவரது பார்யாள், ஸ்ரீ.வினோத் அவர்களின் தாயார் ஸ்ரீமதி.சற்குணாம்பாள் கிளை உறுப்பினர் ஸ்ரீ.திருவேங்கடத்தான் ஆகியோரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டது. கிளை நிர்வாகிகள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS