கூத்தப்பாக்கம் கிளை
10-06-2026 அன்று கிளையின் சார்பாக தலைவர் ஸ்ரீ.ராஜாராமன் தலைமையில் துணைத் தலைவர் ஸ்ரீ.சம்பத் முன்னிலையில் பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.லக்ஷ்மணன் வரவேற்புரையாற்றினார். பொருளாளர் ஸ்ரீ.கணேசன் பொதுச் செயலாளர் ஸ்ரீ.பிரணதார்த்திஹரன், ஸ்ரீ.பாலகுரு, ஸ்ரீ.ராஜசேகரன், ஸ்ரீ.ராமகிருஷ்ணன், ஸ்ரீ.சங்கரன், ஸ்ரீ.ரமேஷ், ஸ்ரீமதி.ராஜேஸ்வரி சங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சேவை செய்து சிறப்பித்தனர். செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.பக்தவத்சலம் கணேஷ் டிராவல்ஸ் உரிமையாளர் ஸ்ரீ.சங்கரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
13-06-2026 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.வே.ராஜாராமன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், கடவுள் வாழ்த்து, வேத கோஷம் மற்றும் சங்க உறுதிமொழியை துணைத் தலைவர் ஸ்ரீ.பூ.சம்பத் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். கிளை உறுப்பினர்கள் ஸ்ரீ.ராமநாதன், ஸ்ரீ.சௌந்தரராஜன், ஸ்ரீமதி.தனலக்ஷ்மி ஸ்ரீனிவாசன், ஸ்ரீமதி.சாயாதேவி துரைராஜ், ஆகியோரது மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உடல் நலம் குன்றியோர் பூரண நலம் பெற வேண்டி ஸ்ரீ.மிருத்தியுன்ஜய ஜபம் ஜபிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.வெ.பிரணதார்த்திஹரன் வரவேற்புரையாற்றினார். 10, 11, 12ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. ஸ்ரீ பாடலீஸ்வரர் கோவிலில் ஐந்தாம் நாள் திருவிழாவில் கிளையின் சார்பாக நீர்மோர் வழங்க தீர்மானிக்கப்பட்டது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.பிரணதார்த்திஹரன், துணைத் தலைவர் ஸ்ரீ.பூ.சம்பத், ஸ்ரீ.என்.பாலாஜி, ஸ்ரீ.வெ.பாலகுரு, ஸ்ரீமதி.ஹேமலதா, ஸ்ரீமதி.ஜானகி சம்பத், ஸ்ரீமதி.அலமேலு வத்ஷன், ஸ்ரீமதி.ரம்யா பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரர்களை அதிகரிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. ஸ்ரீ.வெ.பாலகுரு உறுப்பினர் ஸ்ரீ.என்.பாலாஜி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
கடலூர் மாவட்டம் - மஞ்சக்குப்பம் கிளை
20-05-2026 அன்று கிளையின் சார்பாக பன்னிரு ஆழ்வார்கள் பற்றி குழந்தைகளுக்கான போட்டிகள் கிளைத் தலைவர் ஸ்ரீ.கே.திருமலை அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் ஸ்ரீ.விஜயராகவன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி ஆழ்வார்கள் பற்றி உரையாற்றினார். ஸ்ரீ.ரங்கநாதன் வாழ்த்துரை வழங்கினார். ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவி ஜனனி நன்றியுரையாற்றினார்.
31-05-2026 அன்று கிளைத் தலைவர் ஸ்ரீ.திருமலை தலைமையில் 10, 12 மற்றும் சிபிஎஸ்சி, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மேதகு அரிமா ஸ்ரீ.ரவிச்சந்திரன் அவர்கள் பாராட்டி நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். கிளைப் பொருளாளர் ஸ்ரீ.நரசிம்மன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் ஸ்ரீ.விஜயராகவன், அரிமா மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.வித்யாஸ்ரீ, ஸ்ரீ.அரவிந்தன், ஸ்ரீ.சம்பத் குமார் ஸ்ரீ.நரசிம்மன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவி ஹரிரஞ்ஜனி நன்றி கூற நிகழ்ச்சி நிறைவடைந்தது.
|