11-01-2026 அன்று மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பி.வெங்கடேசன் தலைமையில் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஜாதக பரிவர்த்தனை மற்றும் வேதம் பயிலும் வித்யார்த்திகள் மற்றும் அவர்கள் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் ஸ்ரீ.வி.அருணாச்சலம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.சுரேஷ் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீமதி.அனுசுயா ஸ்ரீதர், ஸ்ரீ.எல்.குமார், பண்ருட்டி கிளைத் தலைவர் ஸ்ரீ.சங்கர் மற்றும் பல கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.கே.ஆர்.பிரபாகர் நன்றியுரையாற்றினார்.
|