வடவள்ளி கிளை
06-04-2025 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீ ராமநவமி வைபவம் தாம்ப்ராஸ் ஹாலில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் துவங்கியது. பிரம்மஸ்ரீ.கணபதி வாத்யார் பூஜைகளை செய்து வைத்தார். பலர் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர். கிளைப் பொருளாளர் ஸ்ரீமதி.சித்ரா கிருஷ்ணகுமார் ஸ்ரீ.எஸ்.கே.சுப்பிரமணியன் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
14-04-2025 அன்று கிளையின் சார்பாக தாம்ப்ராஸ் ஹாலில் விசுவாவசு வருஷ பஞ்சாங்க படனம் பிரம்மஸ்ரீ.கணபதி வாத்யார் மற்றும் பிரம்மஸ்ரீ.ராம்குமார் வாத்தியார் ஆகியோர் பூஜைகளை செய்து பலன்களை தெரிவித்தனர். கிளைத் தலைவர் ஸ்ரீ.மீனாக்ஷிசுந்தரம், பொதுச் செயலாளர் ஸ்ரீ.வி.பாண்டுரங்கன், கௌரவ ஆலோசகர் ஸ்ரீ.ஜெகந்நாதன், இணைச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.விஸ்வநாதன், அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.கே.என்.பரசுராமன், ஆலோசகர் ஸ்ரீ.வி.கோவிந்தன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.என்.கண்ணன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.உஷாகண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.கே.எஸ்.விஜயகுமார் ஸ்ரீ.லக்ஷ்மிநாராயணன், ஸ்ரீ.என்.எஸ்.ராமன், ஸ்ரீ.டி.சங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் விசுவாவசு ஆண்டு பஞ்சாங்கம் வழங்கப்பட்டது.
02-05-2025 அன்று தாம்ப்ராஸ் ஹாலில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி பிரம்மஸ்ரீ கணபதி வாத்தியார் மற்றும் ஒன்பது வேத பண்டிதர்களால் உபநிஷ பாராயணம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஸ்ரீ.மீனாக்ஷிசுந்தரம், பொதுச் செயலாளர் ஸ்ரீ.வி.பாண்டுரங்கன், கௌரவ ஆலோசகர் ஸ்ரீ.ஜெகந்நாதன், இணைச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.விஸ்வநாதன், அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.கே.என்.பரசுராமன், ஆலோசகர் ஸ்ரீ.வி.கோவிந்தன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.என்.கண்ணன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.உஷாகண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.கே.எஸ்.விஜயகுமார் ஸ்ரீ.லக்ஷ்மிநாராயணன், ஸ்ரீ.என்.எஸ்.ராமன், ஸ்ரீ.டி.சங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குரு ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் அருள் வேண்டி ப்ரார்த்தனை செய்தனர்.
கிளை சார்பில் வெளியிட்ட விசுவாவசு வருஷ பஞ்சாங்கம் மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களிடம் வழங்கப்பட்டது. கிளை நிர்வாகிகளுக்கு பாராட்டினையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்து ஆசீர்வாதம் செய்தார்.
|