வடவள்ளி கிளை
கிளையின் சார்பாக 2025ம் ஆண்டு நவராத்திரி கொலுவை முன்னிட்டு கிளை உறுப்பினர்கள் இல்லங்களில் நமது கலாச்சாரத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில் வைக்கப்பட்ட பொம்மை கொலுவிற்கு புகைப்படத்துடன் கூடிய நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
16-11-2025 அன்று கிளையின் சார்பாக தாம்ப்ராஸ் எழுச்சி நாள் நிகழ்ச்சி கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.மீனாக்ஷி சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. நமது கலாச்சாரத்தை பேணிக் காக்கவும், நமது தனித்துவத்தை வலியுறுத்தி எழுச்சி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்ச்சிகளிலும் பொதுச் செயலாளர் ஸ்ரீ.வி.பாண்டுரங்கன் கிளைப் பொருளாளர் ஸ்ரீமதி.சித்ரா கிருஷ்ணகுமார் துணைத் தலைவர் ஸ்ரீ.சி.எம்.ஸ்ரீனிவாசன், அமைப்பு செயலாளர் ஸ்ரீ.கே.என்.பரசுராமன் ஆலோசகர் ஸ்ரீ.வி.கோவிந்தன், இணைச் செயலாளர் ஸ்ரீ.கே.கோபாலன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.என்.கண்ணன், மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.உஷா கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.டி.சங்கரன், ஸ்ரீ.என்.எஸ்.ஐயர் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
|