கோவை மாவட்டம்
ஆனைமலை கிளை

27-08-2025 அன்று ஸ்ரீவிஸ்வேஸ்வரஸ்வாமி திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி அபிஷேகம் மற்றும் தீபாராதனை கிளையின் சார்பாக நடைபெற்றது. ஸ்ரீ.சிவகிரி மற்றும் ஸ்ரீ.சுந்தரம் ஆகியோர் பூஜைகளை நடத்தி வைத்தனர். கிளைத் தலைவர் ஸ்ரீமதி.வரமங்கை, பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஹெச்.கணேசன், பொருளாளர் ஸ்ரீ.கே.ஸ்ரீராம், மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.ஸ்ரீப்ரியா மற்றும் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.


கோயம்புத்தூர் மாவட்டம் - சாய்பாபா காலனி கிளை

16-09-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.பி.சம்புகுமார் தலைமையில் நடைபெற்றது. கிளையின் மூத்த உறுப்பினர்கள் ஸ்ரீ.ரத்னாகர், ஸ்ரீமதி.கீதா ஆகியோரின் மறைவிற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட மகளிரணி செயலாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீமதி.சுதாபாலாஜி அவர்களுக்கு மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.சந்திரா சம்புகுமார் வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தார். கிளையின் சார்பாக மருத்துவ முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.ரகுராமன், பொருளாளர் ஸ்ரீ.வி.பாலகிருஷ்ணன், ஸ்ரீ.ராமஸ்வாமி, ஸ்ரீ.வெங்கடசுப்ரமணியன், ஸ்ரீ.விவேக்குமார், ஸ்ரீ.கௌரிகாந்த், ஸ்ரீமதி.சுதா பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீ.ராமசாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

30-09-2025 அன்று கிளையின் சார்பாக “தேவி மஹாத்மியம்” பாராயணம் செய்யப்பட்டது. கிளைத் தலைவர் ஸ்ரீ.பி.சம்புகுமார் தலைமையில் மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.சுதா பாலாஜி, ஸ்ரீமதி.வசந்தா பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீ.பிரகாஷ் வாத்யார் வாழ்த்துக்களை தெரிவித்தார். மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.சந்திரா சம்புகுமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS