வடவள்ளி கிளை
27-03-2026 அன்று தாம்ப்ராஸ் ஹாலில் கிளையின் சார்பாக தமது வாழ்வில் தர்மத்தை மட்டுமே கடைப்பிடித்து மனிதனாக வாழ்ந்த அவதார புருஷர் ஸ்ரீ ராமபிரானின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஸ்ரீராம நவமி வைபவம் ஸ்ரீ.ராம்குமார் ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணத்துடன் பூஜைகளை சிறப்பாக நடத்தி வைத்தார். ஏராளமானோர் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர்.
14-04-2026 அன்று பராபவ வருஷ பஞ்சாங்க படனம் ஸ்ரீ.கணபதி வாத்யார் அவர்கள் குழுவினர் பலன்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் விசேஷங்கள் பற்றி விரிவாக வாசிக்கப்பட்டது.
21-04-2026 அன்று ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் அவர்களின் ஸ்ரீ சங்கர ஜெயந்தி வைபவம் ஸ்ரீ.கணபதி வாத்யார் தலைமையில் வேத பண்டிதர்களால் உபநிஷத் வேத பாராயணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி வைபவங்களில் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.மீனாக்ஷி சுந்தரம், பொதுச் செயலாளர் ஸ்ரீ.வி.பாண்டுரங்கன், பொருளாளர் ஸ்ரீமதி.சித்ரா கிருஷ்ணகுமார் ஆலோசகர் ஸ்ரீ.வி.கோவிந்தன், அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.கே.என்.பரசுரான், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.என்.கண்ணன், துணைத் தலைவர் ஸ்ரீ.சி.எம்.ஸ்ரீனிவாசன், இணைச் செயலாளர் ஸ்ரீ.கே.கோபாலன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.கே.எஸ்.விஜயகுமார், ஸ்ரீ.எஸ்.எஸ்.ராமன், ஸ்ரீ.டி.சங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
|