- பேட்டை கிளை
06-07-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஸ்ரீ.ஜி.சுப்பிரமணியன் வரவேற்புரையாற்றினார். வீரவாஞ்சிநாதன் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. தினமலர் நிறுவனர் ஸ்ரீ.டி.வி.ராமசுப்பையர் அவர்களின் 41வது நினைவு நாளில் மலர் அஞ்சலி செலுத்த தீர்மானிக்கப்பட்டது. 05-08-2025 அன்று நமது தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீ.என்.கணேசன், ஸ்ரீ.சுந்தர்கணேஷன், ஸ்ரீ.நரசிம்மன், ஸ்ரீ.எஸ்.ராமஸ்வாமி, ஸ்ரீமதி.கோமதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.முரளி ஸ்வஸ்தி வாசகம் வாசிக்க மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா நன்றியுரையாற்றினார்.
திருநெல்வேலி மாவட்டம்
21-07-2025 அன்று மாவட்டத்தின் சார்பாக சுதந்திரப் போராட்ட தியாகியும், தினமலர் நிறுவனருமான ஸ்ரீ.டி.வி.ராமசுப்பையர் அவர்களின் 41ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சிவக்குமார் தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.பரமேஸ்வரன், மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ராஜாராமன், மாவட்ட அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.சுந்தர்ராஜன், மாவட்ட ஆலோசகர் ஸ்ரீ.என்.ஐயப்பன், ஸ்ரீமதி.சிந்தூரி, ஸ்ரீ.சுப்பிரமணியன் (பேட்டை கிளை) ஸ்ரீ.பிரபு, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.சத்யநாராயணன் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.
|