பேட்டை கிளை
பேட்டை கிளை
02-03-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஸ்ரீ.ஜி.சுப்ரமணியன் வரவேற்புரையாற்றினார். மஹா சிவராத்திரி அன்று சிவன்கோவிலில் கிளையின் சார்பாக நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. காரடையான் நோன்பை முன்னிட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது. ஸ்ரீ.என்.கணேசன், ஸ்ரீ.ஆர்.கோமதி, ஸ்ரீ.ஆர்.சுந்தர்கணேஷ், ஸ்ரீ.என்.நரசிம்மன், ஸ்ரீ.எஸ்.ராமஸ்வாமி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.கே.முரளிபட்டர் ஸ்வஸ்தி வாசகம் வாசிக்க மகளிரணிச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.அனுராதா நன்றியுரையாற்றினார்.
|