பேட்டை கிளை
07-09-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.பி.சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஸ்ரீ.ஜி.சுப்ரமணியம் வரவேற்புரையாற்றினார். 06-09-2025 அன்று தினமலர் 75ம் ஆண்டு விழாவிற்கு தினமலர் நிறுவனத் தலைவர் படத்திற்கு நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மகாகவி பாரதியாரின் நினைவு நாளில் அவரது திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஸ்ரீ.சுந்தர்கணேஷ், ஸ்ரீ.என்.நரசிம்மன், ஸ்ரீ.என்.கணேசன், ஸ்ரீமதி.ஆர்.கோமதி, ஸ்ரீ.ராஜபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கே.முரளி பட்டர் ஸ்வஸ்தி வாசகம் வாசிக்க, மகளிரணி செயலாளர் ஸ்ரீ.எஸ்.அனுராதா நன்றியுரையாற்றினார்.
|