பேட்டை கிளை
13-02-2026 அன்று கிளையின் மாதாந்திரக் கூட்டம் தலைவர் ஸ்ரீ.ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் ஸ்ரீ.ஜி.சுப்பிரமணியன் வேத கோஷம் வாசிக்க பொதுச் செயலாளர் ஸ்ரீ.பி.சுந்தரராஜன் வரவேற்புரையாற்றினார். தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. மேலும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு கிளையின் சார்பாக லோக nக்ஷமத்திற்காக ஒரு கால பூஜை நடத்தி ஓம் நமச்சிவாயா என எழுதி ப்ரார்த்தனை செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீ.ஆர்.சுந்தர் கணேஷ், ஸ்ரீ.என்.நரசிம்மன், ஸ்ரீமதி.ஆர்.கோமதி, ஸ்ரீ.என்.கணேஷ், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கே.முரளிபட்டர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.அனுராதா நன்றியுரையாற்றினார்.
|