திருநெல்வேலி மாவட்டம்
பேட்டை கிளை

04-05-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.பி.சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஸ்ரீ.ஜி.சுப்ரமணியன் வரவேற்புரையாற்றினார். தாம்ப்ராஸ் மாநிலத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நமஸ்காரத்தை தெரிவித்து அவரது தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அக்னி நக்ஷ்த்திரம் ஆரம்பமாவதை முன்னிட்டு கிளையின் சார்பாக நீர்மோர் பந்தல் அமைத்திட தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீ.என்.கணேசன், ஸ்ரீ.ஆர்.சுந்தர்கணேஷ், ஸ்ரீ.என்.நரசிம்மன், ஸ்ரீ.எஸ்.ராமஸ்வாமி, ஸ்ரீமதி.ஆர்.கோமதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.கே.முரளிபட்டர் ஸ்வஸ்தி வாசகம் வாசித்தார். மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.ஆர்.அனுராதா நன்றி கூறினார்.


திருநெல்வேலி மாவட்டம் - மகாராஜா நகர் கிளை

04-05-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.பி.பீ.சுந்தரேசன் தலைமையில் நடைபெற்றது. கட்டிட மராமத்து பணிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.எ.சுப்ரமணியன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.ராஜலக்ஷ்மி, பொதுச் செயலாளர் ஸ்ரீ.நம்பி ஸ்ரீனிவாசன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.ஹரிஹரசுப்ரமணியம், ஸ்ரீ.என்.எம்.ராகவன், ஸ்ரீ.ஆர்.திருவேங்கடநாதன் ஸ்ரீ.ராமன், ஸ்ரீமதி.எஸ்.ராமலக்ஷ்மி, ஸ்ரீமதி.மனைவள்ளி, ஸ்ரீமதி.கன்யாம்பாள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS