திருமருகல் கிளை
24-05-2026 அன்று மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சிவக்குமார் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர்கள் ஸ்ரீ.இராமசாமி, ஸ்ரீ.ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீ.பட்டாபிராமன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி உரையாற்றி, புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். கௌரவத் தலைவராக ஸ்ரீ.செல்வராஜ், தலைவராக ஸ்ரீ.பட்டாபிராமன் துணைத் தலைவர்களாக ஸ்ரீ.சுந்தர்கணபதி, ஸ்ரீ.நாகராஜன் ஆலோசகர்களாக ஸ்ரீ.ராமகிருஷ்ணன், ஸ்ரீ.பாலசுப்ரமணியன், அமைப்புச் செயலாளராக ஸ்ரீ.குருமூர்த்தி, ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ.சிவராமன் பொதுச் செயலாளராக ஸ்ரீ.ஆனந்தக்கண்ணன், பொருளாளராக ஸ்ரீ.நடராஜன், மகளிரணிச் செயலாளராக ஸ்ரீமதி.ப்ரியா சாய், இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.ஜெகதீசன் ஆகியோரை அறிமுகம் செய்த பின் பதவியேற்றுக் கொண்டனர். கிளையின் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மற்றும் சங்க செயல்பாடுகள் பற்றியும் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சிவக்குமார் மாவட்ட துணைத் தலைவர்கள் ஸ்ரீ.இராமசாமி, ஸ்ரீ.ஆனந்த், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.மோகன நடராஜன், மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.கீர்த்திவாஸன் ஸிவம், ஸ்ரீ.ஸ்ரீகுமார் ஆகியோர் உரையாற்றினர். பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆனந்தக்கண்ணன் நன்றியுரையாற்றினார். ஏற்பாட்டினை மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் சிறப்பாக செய்திருந்தார்.
|