ஈரோடு மாவட்டம்
- கோபிசெட்டிபாளையம் கிளை

20-05-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.பானுபிரகாஷ் வரவேற்புரையாற்றினார், தலைவர் உரைக்கு பின் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஸ்ரீமதி.கிருஷ்ணலதா நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். அனைவரும் ஒப்புதல் வழங்கினர். பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர்க்கு கல்வி உதவித் தொகை, வசதியில்லாதவர்களுக்கு மருத்துவ உதவி, ஆடி மாதம் குத்து விளக்கு பூஜை, மகளிரணி சார்பாக மாவட்ட மாநாடு நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. 2025-2030 காலகட்டத்திற்கு போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை மற்றும் மாவட்டத் தலைவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் ஸ்ரீ கயிலை பி.முரளிதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினார். ஸ்ரீமதி.சி.என்.கிருஷ்ணலதா நன்றியுரையாற்றினார்.  

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS