04-01-2026 அன்று ஈரோடு மாவட்டம் மற்றும் அனைத்து கிளைகளின் சார்பாக முப்பெரும் விழா கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத் தலைவர் ஸ்ரீ.முரளிதரன் தலைமை வகிக்க கோபி கிளைத் தலைவர் ஸ்ரீ.சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கரூர் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ஸ்ரீதரன் ஐயர், ஸ்ரீ.மணிவண்ணன் பட்டாச்சாரியார், வாழும் கலை இயக்கத்தினைச் சார்ந்த ஆசிரியர்கள் வழக்கறிஞர் ஸ்ரீ.பாலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்டத்தில் நம் சமுதாயத்தினைச் சார்ந்த சுமார் 40 குடும்பங்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வஸ்த்ரங்கள், பண உதவித் தொகை வழங்கப்பட்டன. கடந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நம் சமுதாய குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசுகளும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டன. மேற்படி நிகழ்ச்சியில் கோபியினைச் சார்ந்த ஸ்ரீமதி.பத்மா குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. குழுவினருக்கு பரிசுகளை மாவட்டத் தலைவர் வழங்கினார். கோபி கிளையின் மகளிரணி செயலாளர் நன்றி கூற விழா நிறைவடைந்தது.
|