ஈரோடு மாவட்டம்
காஞ்சிக்கோவில் கிளை

31-05-2026 அன்று புதிய கிளையின் நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம் மாவட்டத் தலைவர் ஆடிட்டர் கயிலை ஸ்ரீ.பி.முரளிதரன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.முரளி முன்னிலையில் நடைபெற்றது. தலைவர் ஸ்ரீ.கே.எஸ்.கௌரிசங்கர் வரவேற்புரையாற்றினார். கிளைத் தலைவராக ஸ்ரீ.கே.எஸ்.கௌரி சங்கர் பொதுச் செயலாளராக ஸ்ரீ.எஸ்.கண்ணன், பொருளாளராக ஸ்ரீ.பி.சண்முகசுந்தரம், மகளிரணி செயலாளராக ஸ்ரீமதி.பி.சித்ரா பரமசிவம், இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.எஸ்.செல்வ பசுபதி சுதன் மற்றும் இதர நிர்வாகிகள் ஏகமனதாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். நிர்வாகிகள் அனைவரும் ஏற்புரையாற்றினர். கிளை கௌரவத்தலைவர் ஸ்ரீ.கே.கோபாலகிருஷ்ணன், ஈரோடு கிளைத் தலைவர் ஸ்ரீ.கே.நடராஜன், மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பி.முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.முரளி ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினர். உறுப்பினர் சேர்க்கை தாம்ப்ராஸ் மாத இதழ் மற்றும் இதர விஷயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.    

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS