பருத்திப்பட்டு கிளை
08-03-2026 அன்று கிளையின் (ஞiமேல க்ஷசயnஉh) முதலாம் ஆண்டை முன்னிட்டு மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கடவுள் வாழ்த்துக்குப் பின் ஸ்ரீமதி.ஸ்ரீலக்ஷ்மி ஜகந்நாதன் வரவேற்புரையாற்றினார். சௌ.ஸ்ரேயாவின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மகளிரின் உடல் ஆரோக்யத்திற்காக யோகாசனங்கள் மற்றும் முத்திரையை ஸ்ரீமதி.வசந்தி செய்து காண்பித்தார். பெண்மையை போற்றும் வகையில் ஸ்ரீமதி.வத்ஸலா சுந்தர் கவிதை ஒன்றை வாசித்தார். பெண்கள் தங்களை உறுதிபடுத்திக்கொள்ள உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. நன்றியுரை, தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
|