- திண்டிவனம் கிளை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிளையின் ஆண்டு விழா கடந்த 07-01-2026 அன்று கிளைத் தலைவர் ஸ்ரீ.தண்டபாணி ஐயர் தலைமையில் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.குமார் ஐயர் மற்றும் துணைத் தலைவர் ஸ்ரீ.சீனுவாசன் ஐயர் முன்னிலையில் நடைபெற்றது. அனைவரையும் பொருளாளர் ஸ்ரீ.சீனிவாசன் ஐயர் வரவேற்றார். விழாவில் செயலாளர் ஸ்ரீ.சுகுமார் ஐயர் ஆலோசகர்கள் ஸ்ரீ.சேகர் ஐயர் ஸ்ரீ.சுந்தரம் ஐயர் பொதுச் செயலாளர் ஸ்ரீ.பாலாஜி ஐயர் இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ராமசுப்பு மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.ஜெயந்தி, மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.கோமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு காலண்டர் வழங்கப்பட்டது. மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
விழுப்புரம் மாவட்டம்
விழுப்புரம் மாவட்ட அமைப்பின் சார்பாக 31-01-2026 அன்று விழுப்புரத்தில் ஜெகத்குரு ஸ்ரீகாஞ்சி மஹா பெரியவா ஜென்ம ஸ்தலத்தில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளதால் மேற்படி விழா அழைப்பிதழை கடந்த 14-01-2026 அன்று ஜெகத் குரு காஞ்சி ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளிடம் நேரில் சமர்ப்பித்து ஓமந்தூர் வேத பாடசாலையின் நிர்வாகியும் மாநில இணைச் செயலாளரும் விழுப்புரம் மாவட்ட துணைத் தலைவருமான முருக்கேரி ஸ்ரீ.சீனுவாசன் ஐயர் அவர்கள் ஸ்ரீ குருவின் ஆசீர்வாதங்களை வாழ்த்தினையும் பெற்றார்.
|