தஞ்சாவூர் மாவட்டம்
- திருவையாறு கிளை

23-03-2025 அன்று கிளையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் ஸ்ரீ.வி.ஏ.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இணைச் செயலாளர் ஸ்ரீ.கே.மணிகண்டன் வேதகோஷம் வாசித்தார். சங்க உறுதிமொழிக்கு பின் பொதுச் செயலாளர் ஸ்ரீ.வி.கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார். 02-03-2025 அன்று ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோவிலுக்கு வருகை தந்த காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு கிளையின் சார்பாக பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் சிறப்பாக பூஜைகள் நடைபெற்றது. ஸ்வாமிகள் அனைவருக்கும் அருளாசி வழங்கினார். ஏற்பாட்டினை பொதுச் செயலாளர் ஸ்ரீ.வி.கார்த்திகேயன் இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.எஸ்.விஸ்வேஷ் செய்திருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சித்திரை ஒன்பதாம் நாள் தேர்திருவிழா, ஆவணி மாதத்தில் சமஷ்டி உபநயனம் ஆடிமாதத்தில் திருவிளக்கு பூஜை, ஆகிய நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது. தாம்ப்ராஸ் உறுப்பினர் சேர்க்கை, தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தா, வங்கி கணக்கு, பற்றி ஆலோசிக்கப்பட்டது. பொருளாளர் ஸ்ரீ.எஸ்.சிவபாஸ்கர் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.  

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS