முடிச்சூர் கிளை
10-05-2026 அன்று புதிய கிளை துவக்க விழா மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. வரதராஜபுரம் ஸ்ரீ.சந்திரசேகரபாரதி அத்யாபகர் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி உரையாற்றினார். கிளைத் தலைவராக ஸ்ரீ.சந்திரசேகரபாரதி பொதுச் செயலாளராக ஸ்ரீ.முத்துக்குமார், பொருளாளராக ஸ்ரீமதி.கிருத்திகா கார்த்திக், மகளிரணி செயலாளராக ஸ்ரீமதி.கீதா ராகவன், இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.விஸ்வேஸ்வரன், துணைத் தலைவர்களாக ஸ்ரீமதி.கீதா ராகவன், ஸ்ரீ.வெங்கடேஸ்வரன், ஆலோசகர்களாக ஸ்ரீ.சதீஷ் ரங்கராஜன், ஸ்ரீ.மஹாதேவன், மகளிரணிச் செயலாளராக ஸ்ரீமதி.உமா மகேஸ்வரி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தபின் பொறுப்பேற்றுக் கொண்டனர். மாநில ஆலோசகர் ஸ்ரீ.கலியகுருமூர்த்தி, மாநில செயலாளர்கள் ஸ்ரீ.சம்பத்குமார், ஸ்ரீ.சங்கரநாராயணன், மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீ.கல்யாணராமன், மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.சுரேஷ் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.பாலாஜி, அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.பாலகுருமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டத் தலைவர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கார்த்திக் பாபு, மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர். நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் - மாமண்டூர் கிளை
12-05-2026 அன்று புதிய கிளையின் துவக்க விழா மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ.பிரபு முன்னிலை வகித்தார். ஸ்ரீ.சுரேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். புதிய கிளைத் தலைவராக ஸ்ரீ.பிரபு, பொதுச் செயலாளராக ஸ்ரீ.மகேஷ், பொருளாளராக ஸ்ரீ.சுரேஷ்குமார், துணைத் தலைவராக ஸ்ரீ.பாலாஜி, மகளிரணிச் செயலாளராக ஸ்ரீமதி.நித்யா, இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.புவனகணேஷ், ஆலோசகர்களாக ஸ்ரீ.பிரபு, ஸ்ரீ.சுப்ரமணியன், இளைஞரணி இணைச் செயலாளராக ஸ்ரீ.ஸ்ரீநிவாஸசுதர்சனம், மகளிரணி இணைச் செயலாளராக ஸ்ரீமதி.பிரியா புவன கணேஷ், அமைப்புச் செயலாளராக ஸ்ரீ.சங்கர நாராயணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீ.கல்யாணராமன், மாவட்ட செயலாளர் ஸ்ரீ.கிரி மற்றும் பலர் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி உரையாற்றினர். மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.கார்த்திக் பாபு, மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்தனர். நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
|