குத்தாலம் கிளை
16-11-2025 அன்று கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.முரளி தலைமையில் தாம்ப்ராஸ் எழுச்சி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த உறுப்பினர்கள் ஸ்ரீ.எஸ்.வரதராஜன், ஸ்ரீ.டி.எஸ்.சுந்தரம் ஆகியோர் தாம்ப்ராஸ் கொடியை ஏற்றி வைத்தனர். ஸ்ரீ.ஆர்.முரளி வரவேற்புரையாற்றி சங்க உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர். மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.டி.ராஜீ அவர்கள் சத்ய பிராமண உறுதிமொழி வாசிக்க குமாரி.அபர்ணா, குமாரி.ஷோபனா, குமாரன்.வி.அனிருத் உறுதிமொழியேற்றனர். மாநில பொதுக்குழுவில் விருதுகள் வழங்கியதற்கு மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களுக்கும், மாவட்ட அமைப்பிற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கிளை ஆலோசகர் மற்றும் மாநில ஆலோசகருமான ஸ்ரீ.டி.கலியமூர்த்தி கைபேசி மூலம் வாழ்த்துரை வழங்கினார். உபதலைவர் ஸ்ரீ.ஆர்.கிருஷ்ணஸ்வாமி, ஸ்ரீ.டி.எஸ்.சுந்தரம் அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில இணைச் செயலாளர் ஸ்ரீ.வி.காசிநாதன் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீ.வி.ராமதாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டை செய்திருந்தார். அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.ஆர். நடராஜன் நன்றியுரையாற்றினார்.
|