மயிலாடுதுறை மாவட்டம்
- திருநகரி கிளை

20-04-2026 அன்று கிளை புனருத்தாரணம் செய்யப்பட்டு 2026-2030ம் ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் கடவாசல் ஸ்ரீ.வெங்கட்ராமன்(எ)ரமணன் ஐயர் தலைமை வகித்தார். வரவேற்புரைக்குப் பின்னர் கிளையின் தலைவராக ஸ்ரீ.ஜெகன்னாதன் ஐயங்கார், துணைத் தலைவர்களாக ஸ்ரீ.ரெங்கநாதன் ஐயங்கார், ஸ்ரீ.ரெகுநாதன் ஐயங்கார், பொதுச் செயலாளராக ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் ஐயங்கார், பொருளாளராக எம்பார் ஸ்ரீ.கீதாச்சார்யன் ஐயங்கார், ஆலோசகராக எம்பார் ஸ்ரீ.ராமானுஜாச்சார்யார், மகளிரணிச் செயலாளராக ஸ்ரீமதி.ராதிகா ஐயர், இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.வேத ராஜன் பட்டாச்சாரியார், ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ரகுராமன் ஐயர் மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீ.முத்துகிருஷ்ணன் ஐயர் மாவட்ட அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.முரளி ஐயர் மாவட்ட செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் ஐயர், மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.ப்ரீத்தி ராஜன் பாபு ஐயங்கார் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் ஸ்ரீ.ஹரி கணேஷ் ஐயர், மாவட்ட மாணவரணி செயலாளர் செல்வி.அபிராமி சுந்தரி, சீர்காழி கிளைத் தலைவர் ஸ்ரீ.தியாகராஜன் ஐயர் குத்தாலம் கிளைச் செயலர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி ஐயர், தென்பாதி டாக்டர் சத்யநாராயணன் ஐயர் மற்றும் பலரும் உரையாற்றினர். மாவட்டத் தலைவர் சிறப்புரையாற்றினார். நிறைவாக ஸ்வஸ்தி வாசகத்துடன் விழா முடிவுற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாநில இணைச் செயலாளரும் மாவட்ட செயலாளருமான காவளம்பாடி ஸ்ரீ.ஜெயப்பிரகாஷ் ஐயங்கார் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் ஐயர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.  

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS