- குத்தாலம் கிளை
14-04-2026 அன்று கிளையின் சார்பாக பராபவ வருஷ பஞ்சாங்க படனம் தலைவர் ஸ்ரீ.ஆர்.முரளி தலைமையில் நடைபெற்றது. குடந்தை ஸ்ரீ.சேனாதிபதி ஸ்ரீ விக்னேஸ்வரர் பூஜை மற்றும் பலன்களை வாசித்தார். தலைவர் தாம்ப்ராஸ் உறுப்பினர் சேர்க்கை மற்றும் செயல்பாடுகள் பற்றி தெரிவித்தார். அனைவருக்கும் பராபவ வருஷ பஞ்சாங்கம் மற்றும் தாம்பூலம் வழங்கப்பட்டது. பஞ்சாங்கத்திற்கு நிதியுதவி அளித்த கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி குத்தாலம் கிளைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.ரகுராமன், பொருளாளர் ஸ்ரீ.டி.கே.வி.கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ஸ்ரீ.கிருஷ்ணசாமி, செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.முத்துகிருஷ்ணன், ஸ்ரீ.பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
|