சென்னை வடக்கு மாவட்டம்
கொரட்டூர் கிளை

22-05-2026 முதல் 26-05-2026 வரை கிளையின் சார்பாக வேத பண்டிதர் ஸ்ரீ.ஹரிஹரன் கனபாடிகள் தலைமையில் ரிக்வேத க்ரமத்தில் இரண்டு அஷ்டகங்கள் பாராயணம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஸ்ரீ.சுவாமிநாதன், துணைத் தலைவர் ஸ்ரீ.நாராயணராஜா பொதுச் செயலாளர் ஸ்ரீ.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு ஏற்பாட்டினைச் செய்தனர். நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பாராயணத்தில் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் ஸ்ரீ.நாராயணராஜா தம்பதிகள் பாராயணத்திற்கான சன்மானத்தை ஏற்றுக் கொண்டனர்.

14-04-2026 முதல் 07-06-2026 வரை தொடர்ந்து 55 நாட்கள் கிளையின் சார்பாக கோடைக்காலத்தை முன்னிட்டு தண்ணீர்ப் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு சேவை செய்த மற்றும் உதவிய அனைவருக்கும் கிளையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. 04-06-2026 அன்று செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.தண்டபாணி அவர்களின் புத்ரி சாய் லக்ஷ்மி விவாஹத்திற்கு ரூ.10,000/- கிளையின் சார்பாக நிதிஉதவி வழங்கப்பட்டது. கிளையின் சார்பாக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

+2 பொதுத் தேர்வில் டாக்டர் நல்லிகுப்புசாமி விவேகானந்தா வித்யாலயாவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மூன்று மாணவர்களுக்கு கிளையின் சார்பாக கல்வி ஊக்கத் தொகை ரூ.8000/- நன்கொடையாக காசோலையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சுவாமிநாதன், துணைத் தலைவர் ஸ்ரீ.நாராயணராஜா ஸ்ரீமதி.துர்காபிரசாத் ஆகியோர் வழங்கினர்.  


வடசென்னை மாவட்டம் - வில்லிவாக்கம் மற்றும் அண்ணாநகர் கிளை

17-06-2026 அன்று தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் வழிகாட்டுதலுடன் வீரவாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சதீஷ்குமார் வில்லிவாக்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஹரிகிருஷ்ணா, அண்ணாநகர் கிளைத் தலைவர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் வில்லிவாக்கம் கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.டி.எஸ்.ரமேஷ், பொருளாளர் ஸ்ரீமதி.அஸ்வினி ஹரி, துணைத் தலைவர் ஸ்ரீமதி.ஜெயந்தி, இணைச் செயலாளர் ஸ்ரீமதி.தனலக்ஷ்மி, மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.ராமசாமி, ஸ்ரீமதி.மீனாக்ஷி ராமசாமி, ஸ்ரீமதி.அஸ்வினி மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.


வட சென்னை மாவட்டம் - வில்லிவாக்கம் கிளை

10-05-2026 முதல் கிளையின் சார்பாக தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் நல்லாசியுடன் தொடர்ந்து எட்டு வாரம் கோடைக்காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஹரிகிருஷ்ணன், பொதுச் செயலாளர் ஸ்ரீ.சா.ரமேஷ், பொருளாளர் ஸ்ரீமதி.அஸ்வினி ஹரி துணைத் தலைவர் ஸ்ரீமதி.ஜெயந்தி, அமைப்புச் செயலாளர், ஸ்ரீ.முரளி, மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.தனலக்ஷ்மி, இளைஞரணி இணைச் செயலாளர் ஸ்ரீ.ரெங்கராஜ், உறுப்பினர்கள் ஸ்ரீமதி.வித்யா, ஸ்ரீ.பாலசுப்பிரமணி, ஸ்ரீ.ராகவ், ஸ்ரீ.கணேஷ், ஸ்ரீ.பார்த்தசாரதி, ஸ்ரீ.வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு சேவை செய்து சிறப்பித்தனர்.


வட சென்னை மாவட்டம் - கொரட்டூர் கிளை

17-06-2026 அன்று கிளையின் சார்பாக சுதந்திர போராட்ட தியாகி வீரவாஞ்சிநாதன் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கொரட்டூர் மற்றும் வடசென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சுவாமிநாதன் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.பாலாஜி, துணைத் தலைவர் ஸ்ரீ.நாராயணராஜ், பொருளாளர் ஸ்ரீ.ராமசாமி, மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.தைலா சுவாமிநாதன் மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.அன்னபூரணி செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமதி.ஜான்சி, ஸ்ரீமதி.கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீ. ஸ்ரீதர் முன்னாள் தலைவர் ஸ்ரீ.சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டு சேவை செய்து சிறப்பித்தனர்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS