அம்பத்தூர் கிளை
23-02-2025 அன்று கிளையின் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம் நடைபெற்றது. தேர்வு எழுத தேவையான பொருட்கள் வைத்து பிராத்தனை செய்யப்பட்டது. காரடையான் நோன்பை முன்னிட்டு மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன. கிளைத் தலைவர் ஸ்ரீ.லெக்ஷ்மி நாராயணன், பொதுச் செயலாளர், ஸ்ரீமதி.ராஜேஸ்வரி இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.கே.ஆர்.ஸ்ரீனிவாசன், பொருளாளர் ஸ்ரீ.ஸ்வாமிநாதன், ஸ்ரீமதி.கிரிஜாரவி, கொரட்டூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஸ்வாமிநாதன் ஸ்ரீமதி.தைலா ஸ்வாமிநாதன், ஆகியோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீ.கே.கே.ஸ்ரீனிவாசன் நன்றியுரையாற்றினார்.
வடசென்னை மாவட்டம் - முகப்பேர் கிளை
29-12-2024 அன்று கிளையின் செயற்குழு கூட்டம் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஸ்ரீ.ஆர்.குமார் தலைமையில் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டடம் நடைபெற்றது.
04-01-2025 அன்று மார்கழி மாத பஜனை கிளையின் சார்பாக நடைபெற்றது.
09-02-2025 அன்று கிளையின் சார்பாக குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், உபதலைவர் வெங்கடராமன், பொருளாளர் ஸ்ரீ.வெங்கடேஸ்வரன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ராஜேஸ், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.லக்ஷ்மி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
|