கடியாப்பட்டி கிளை
22-09-2025 முதல் 02-10-2025 வரை கிளையின் சார்பாக நவராத்ரி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விஜயதசமி அன்று 10 சுமங்கலிக்கு மங்கல பொருட்களை மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.வி.மாலா வழங்கினார். பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஜி.சங்கர் கணேஷ் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார்.
04-10-2025முதல் 11-10-2025 வரை இராமாயண உபன்யாசம் மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.வி.மாலா அவர்கள் சொற்பொழிவாற்றினார். ஏற்பாட்டினை கிளைத் தலைவர் ஸ்ரீ.பி.பாலசுப்ரமணியன் செய்திருந்தார்.
11-10-2025 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீ ஜெய பாண்டுரங்க பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பூஜைகள் ஸ்ரீ.பாலசுப்ரமணியன் செய்தார். ஏற்பாட்டினை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார். ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
18-10-2025 அன்று தீபாவளியை முன்னிட்டு கிளையின் சார்பாக புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி கிளைத் தலைவர் ஸ்ரீ.பி.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஜி.சேகர் கணேஷ் முன்னிலை வகித்தார்.
குமாரி.எஸ்.கனகலக்ஷ்மி வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ.சி.பிரகாஷ், ஸ்ரீ.பி.சுப்பிரமணியன், ஸ்ரீ.பி.லக்ஷ்மணன், ஸ்ரீமதி.எல்.ராஜலக்ஷ்மி, ஸ்ரீ.செல்வமணி ஆகியோருக்கு தலைவர் புத்தாடைகளை வழங்கினார். சிறந்த கிளைக்கான விருதினை வழங்கிய மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களுக்கு கிளையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
|