திருவாரூர் மாவட்டம்
திருத்துறைப்பூண்டி கிளை

24-05-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் (வழக்கறிஞர்) ஸ்ரீ.டி.என்.ஏ.கணேசன் தலைமையில் நடைபெற்றது. ஆலோசகர் குருஜி.சௌரிராஜன் முன்னிலை வகித்தார். கடவுள் வாழ்த்து வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. கிளை சார்பாக சமஷ்டி உபநயனம் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. தலைவர் உரையில் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றியும் தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது பற்றியும் உரையாற்றினார். 2025-2030 காலகட்டத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துகளும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. உபதலைவர் ஸ்ரீ.எல்.கணேஷ், பொருளாளர் டாக்டர் வி.சுதர்சனன், இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.எல்.விக்னேஷ், டாக்டர்.இந்திரா வரதராஜன், ஸ்ரீ.பாலசுப்ரமணியன், வி.எ.ஓ.சக்கரவர்த்தி, ஸ்ரீ.ரமணி, ஸ்ரீ.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீ.ஆர்.நாகராஜன், ஸ்ரீ.உமாசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.விஜயா கணேசன் நன்றியுரையாற்றினார். ஸ்வஸ்தி வாசகம், தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.  

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS