- ஜெ.பி.நகர் கிளை
18-05-2025 கிளையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் ஸ்ரீ.எஸ்.எம்.புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.சாரதா ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஸ்ரீ.முரளி வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். அனைவரும் ஒப்புதல் அளித்தனர். கிளைத் தலைவர் மற்றும் கிளை பொறுப்பாளர் ஸ்ரீ.அருண்குமார் ஆகியோர் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினர். மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.ஸ்ரீவித்யா இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ரவிச்சந்திரன், ஸ்ரீ.அரவிந்த் ஸ்ரீராம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலை நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
|