- ஜெ.பி.நகர் கிளை
10-05-2026 அன்று கிளையின் சார்பாக (மஸ்கட்) ஸ்ரீ.ஆனந்த் பாகவதர் குழுவினர் ஸ்ரீ.வள்ளி தேவசேனா திருக்கல்யாண மஹோத்சவத்தை நடத்தி வைத்தனர். அதன் தொடர்ச்சியாக திருப்புகழ் பஜனையும் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர். அதனைத் தொடர்ந்து கிளையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் ஸ்ரீ.எஸ்.எம்.புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.என்.சாரதா ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். கிளை பொருளாளர் ஸ்ரீ.எஸ்.முரளி 2025-2026ம் ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். அனைவரும் ஒப்புதல் வழங்கினர். கிளை பொறுப்பாளர் ஸ்ரீ.ஆர்.அருண்குமார் கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.எம்.புவனேஸ்வரன் ஆகியோர் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி உரையாற்றினர். துணைத் தலைவர் ஸ்ரீ.என்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உடல் நலம் குன்றிய காரணத்தால் ஸ்ரீ.கே.கோபாலகிருஷ்ணன் (தலைமை ஆசிரியர் ஓய்வு) அவர்கள் கிளையின் துணைத்தலைவராக ஏகமனதாக நியமிக்கப்பட்டார். ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றியுரை தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
|