- நங்கநல்லூர் கிளை
11-01-2026 அன்று கிளையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக “ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்கிரீவர் ஹோமம்” மற்றும் மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம் ஆகியவை ஸ்ரீ.விஜய்சர்மா சாஸ்திரிகளால் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டன. சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் எழுது பொருட்கள், பிரசாதம் வழங்கப்பட்டன. மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் தலைமை தாங்கி எழுச்சியுரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.லலிதா சுகுமார், மாநில ஆலோசகர் ஸ்ரீ.நரசிம்மன், மாநில செயலாளர் ஸ்ரீ.வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார். மேற்படி நிகழ்ச்சிகள் யாவும் கிளைத் தலைவர் ஸ்ரீ.அனிருத், ஸ்ரீ.சுரேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வாண்டு கிளையில் சுமார் 1000 உறுப்பினர்களுக்கு மேல் சேர்ப்பது என இலக்கு நிர்ணயித்தனர். அதற்கான ஒத்துழைப்பினை அனைவரும் நல்கிட கிளைத் தலைவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பொதுச் செயலாளர் ஸ்ரீ.மணி ஐயர் இடைக்கால வரவு-செலவு அறிக்கையினை வாசித்தார். கிளையின் ஆலோசகரும், மாநில ஆலோசகருமான ஸ்ரீ.குருராஜன் இதுநாள் வரை கிளையில் செயல்படுத்திய நிகழ்ச்சிகளை எடுத்து வைத்தார். வருங்கால திட்டங்களையும், அதற்கு கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் உதவியை நாடினார். கிளை உறுப்பினர் ஸ்ரீ.முரளிதரன் அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கப்பட்டது. மாநிலத் தலைவர் தனது எழுச்சியுரையில் பிராமணர்கள் கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள், கலாச்சாரங்கள், அனுஷ்டானங்கள் பற்றி பல அரிய கருத்துக்களை கூறினார். தொடர்ந்து கிளையின் சார்பாக நடத்தப்பட்ட “நவராத்திரி கொலு” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநிலத் தலைவர் பரிசுகள் வழங்கினார். நிறைவாக மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.காயத்ரி அனிருத் நன்றி நவில ஸ்வஸ்தி வாசகம் இசைக்கப்பட்டு நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிளையின் பொதுச் செயலாளர் ஸ்ரீ.மணி ஐயர், அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீதர், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.சூர்யாஸ்ரீ பாலாஜி, ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
|