- நங்கநல்லூர் கிளை
29-06-2025 அன்று கிளையின் புனருத்தாரண கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.அனிருத் தலைமையில் நடைபெற்றது. கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. மாநிலச் செயலாளர் ஸ்ரீமதி.லாவண்யா நாராயணன் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஒய்.ரமேஷ் தென் சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.லலிதா சுகுமார், மாநில துணை பொதுச் செயலாளர் ஸ்ரீ.ராமநாதன், மாநில ஆலோசகர் ஸ்ரீ.வி.எல்.நரசிம்மன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் மற்றும் இதர விஷயங்கள் பற்றி எழுச்சியுரையாற்றினார். மாநிலச் செயலாளர் கூடுவாஞ்சேரி ஸ்ரீ.கே.வெங்கடேஷ் நன்றியுரையாற்றினார். மாநில ஆலோசகர் ஸ்ரீ.கே.குருராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
|