சென்னை தென் மாவட்டம்
- நங்கநல்லூர் கிளை

01-11-2025 அன்று கிளையின் செயற்குழு கூட்டம் தலைவர் ஸ்ரீ.எஸ்.அனீருத் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரைக்கு பின் எதிர் வரும் காலங்களில் கிளையின் செயல்பாடுகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். கிளை ஆலோசகர் ஸ்ரீ.கே.குருராஜன் கிளை செயல்பட வேண்டிய முறை மற்றும் தாம்ப்ராஸ் மாத இதழ் பற்றி எடுத்துரைத்தார். மாநில செயலாளர் கூடுவாஞ்சேரி ஸ்ரீ.வெங்கடேஷ் பரிந்துரைப்படி கோயம்புத்தூர் ஸ்ரீ.ராதாகிருஷ்ணன் அவர்கள் புதல்வி திருமணத்திற்கு உதவி கோரி கிளைத் தலைவரை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் கிளையின் சார்பாக ரூ.42,000/- வசூலித்துக் கொடுக்கப்பட்டது. திருமணம் தொடர்பாக பல தகவல்களை கிளைத் தலைவருக்கு தெரிவித்த மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஒய்.ரமேஷ் அவர்களுக்கும், உடையாம்பாளையம் கிளைத் தலைவர் ஸ்ரீ.சந்திரசேகர் அவர்களுக்கும், அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.அனீருத் அவர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. கிளை சார்பாக பொதுக்குழு நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகளை அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது. அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.ஸ்ரீதர், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீமதி.காயத்ரி பாலாஜி, ஸ்ரீ.வரதராஜன், ஸ்ரீமதி.ரேவதி, ஸ்ரீ.பாலாஜி, ஸ்ரீ.பார்த்தசாரதி மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுச் செயலாளர் ஸ்ரீ.மணி நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS