விருகம்பாக்கம் கிளை
13-04-2025 அன்று கிளையின் சார்பாக விசுவாவசு புத்தாண்டு பஞ்சாங்கம் வெளியீட்டு விழா தலைவர் ஸ்ரீ.எஸ்.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநில போஷகர் ஸ்ரீ.ஆர்.ரவிக்குமார் பூஜைகளை செய்து வைத்து பஞ்சாங்கப்படனம் நடைபெற்றது. பின்னர் கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.வி.ராமநாதன் வரவேற்புரையாற்றினார். கிளைத் தலைவர் பஞ்சாங்கத்தை வெளியிட உபதலைவர் ஸ்ரீ.சி.கே.ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். ஸ்ரீ.ஜம்புநாதன் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.எம்.ஸ்ரீனிவாசன் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினார். மாநில போஷகர் ஸ்ரீ.ஆர்.நாகராஜன் சாலிக்கிராமம் கிளை உபதலைவர் ஸ்ரீ.எஸ்.நாராயணன், ரங்கராஜபுரம் கிளைத் தலைவர் டாக்டர்.டி.சாய்ராம், மாநில போஷகரும் நன்கொடையாளருமான ஸ்ரீ.எஸ்.ஜி.நடராஜன், ஆடிட்டர் ஸ்ரீ.எஸ்.சுந்தர், அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.டி.ஜெயகோபால், பொருளாளர் ஸ்ரீ.கே.வி.நாகராஜன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.ஜயலக்ஷ்மி நாராயணன் ஆலோசகர் ஸ்ரீ.ஆர்.சந்தானம், மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.ருக்மணிராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமதி.கமலாராமச்சந்திரன் ஸ்ரீமதி.டி.செல்லம்மா, ஸ்ரீ.எம்.கே.சுப்ரமணியன், ஸ்ரீ.முகுந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.டி.ஜெயகோபால் நன்றியுரையாற்றினார்.
மத்திய சென்னை மாவட்டம் - கொளத்தூர் கிளை
கிளையின் சார்பாக மே 11, 18, 25 ஜூன் 01, மற்றும் 08 அகிய நாட்களில் கோடை காலத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. மே 18ம் தேதி உறுப்பினர் ஸ்ரீ.லெக்ஷ்மிநரசிம்மன் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் தலைவர் ஸ்ரீ.ஹரி பொதுச் செயலாளர் ஸ்ரீ.மூர்த்தி உபதலைவர் ஸ்ரீ.அருணாச்சலம் ஸ்ரீ.ராமகிருஷ்ணன் ஸ்ரீ.ஸ்ரீதர் சாஸ்த்ரி, ஆலோசகர் ஸ்ரீ.டி.என்.ரமேஷ், இணைச் செயலாளர் ஸ்ரீ.முரளி மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.அஸ்வினி ஹரி கிளை மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.லக்ஷ்மிகுமார் ஸ்ரீமதி.வைதேகி, ஸ்ரீமதி.ஜெயந்தி, ஸ்ரீ.வெங்கடேஷ், ஸ்ரீ.சடகோபன், ஸ்ரீமதி.ரஞ்ஜனி முரளி ஆகியோர் கலந்து கொண்டு சேவை செய்தனர். ஏற்பாட்டினை இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கிரிஷ் உபதலைவர் ஸ்ரீ.ஸ்ரீதர் மேற்கொண்டனர்.
|