சென்னை மத்திய மாவட்டம்
விருகம்பாக்கம் கிளை

23-02-2025 அன்று கிளையின் சார்பாக பள்ளி மாணவ, மாணவியர் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்கீரிவ ஹோமம், காம்யாத்த ஹோமம் மற்றும் பூஜைகள் ஸ்ரீ.ஆர்.ரவிக்குமார் சாஸ்திரிகள் (மாநில போஷகர்) சிறப்பாக நடத்தி வைத்தார். சுமார் 200 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். சென்னை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீமதி.சுந்தரி ரங்கநாதன் வாழ்த்துரை மற்றும் கிளைத் தலைவர் ஸ்ரீ.சாய்ராம், கோடம்பாக்கம் கிளை நிர்வாகிகள் ஸ்ரீமதி.லக்ஷ்மி ஸ்ரீனிவாசன் ஸ்ரீமதி.கமலா சங்கர், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எஸ்.சதீஸ்குமார் பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.எம்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். தலைவர் ஸ்ரீ.எஸ்.நாகராஜன், பொருளாளர் ஸ்ரீ.கே.வி.நாகராஜன், பொதுச் செயலாளர் ஸ்ரீ.கே.வி.ராமநாதன், ஆலோசகர் ஸ்ரீ.ஆர்.சந்தான நரசிம்மன், ஸ்ரீமதி.கே.செல்லம்மாள், ஸ்ரீமதி.பவானி சந்தானம் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்தனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.  


மத்திய சென்னை மாவட்டம் - கொளத்தூர் கிளை

23-03-2025 அன்று கிளையின் ஐம்பெரும் விழா தலைவர் ஸ்ரீ.ஹரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ.ஸ்ரீதரன், ஸ்ரீ.ஹரிஇத்திராக்சி குழுவினர் விஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்லோகம் பாராயணம் செய்தனர். மகளிருக்கான ஆன்மீக வினாடி விh போட்டி ஸ்ரீமதி.கோமதி, ஸ்ரீ.சுதாகர் நடத்தினர், ஜோடி நம்பர் 01 நிகழ்ச்சியை ஸ்ரீமதி. அஸ்வினி ஹரி நடத்தி வைத்தார். பிராமண பாஷை போட்டியை மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் நடத்தினார். அதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கடவுள் வாழ்த்து மற்றும் வேத கோஷம் ஸ்ரீ.அருணாச்சலம், உபதலைவர் ஸ்ரீ.ஸ்ரீதரன், அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.ஆதிசங்கர நாராயணன் ஆகியோர் வாசித்தனர். மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.

மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பொதுச் செயலாளர் ஸ்ரீ.மூர்த்தி, வரவேற்புரையாற்றினார். கடந்தாண்டு கிளை செயல்பாடுகளை ஸ்ரீ.ஹரி எடுத்துரைத்தார். வரவு செலவு கணக்கை பொருளாளர் ஸ்ரீ.பிரகாஷ் சமர்ப்பிக்க அனைவரும் ஒப்புதல் வழங்கினர். சென்னை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீமதி.சுந்தரி ரெங்கநாதன் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சதீஷ் குமார், பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.எம்.ஸ்ரீனிவாசன், பொருளாளர் ஸ்ரீ.ராமநாதன் தென் சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீமதி.லலிதா சுகுமார், வடசென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ஸ்வாமிநாதன் பொருளாளர் ஸ்ரீ.ராமஸ்வாமி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஸ்ரீ.ராமநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களுக்கு கொளத்தூர் கிளை சார்பாக வீரன் வாஞ்சி விருது வழங்கப்பட்டது. சென்னை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீமதி.சுந்தரி ரங்கநாதன் அவர்களுக்கு ஸ்ரீ பாரதி விருது வழங்கப்பட்டது. கோடம்பாக்கம் கிளைத் தலைவர் ஸ்ரீமதி.புஷ்பம், அண்ணாநகர் கிளைத் தலைவர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி, ரெங்கராஜபுரம் கிளைத் தலைவர் ஸ்ரீ.சாய்ராம், பெரம்பூர் கிளை செயலாளர் ஸ்ரீ.ஜெயக்குமார், முகப்பேர் கிளைத் தலைவர் ஸ்ரீ.குமார் ஆகியோரை கிளையின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியுர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் விசுவாவசு பஞ்சாங்கம் வெளியிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் எழுச்சியுரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.லக்ஷ்மிகுமார், இணைச் செயலாளர் ஸ்ரீமதி.வைதேகி ஸ்ரீதர், ஸ்ரீமதி.அஸ்வினி ஹரி செய்திருந்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.கிரிஷ் நன்றியுரையாற்றினார். ஆலோசகர் ஸ்ரீ.ரமேஷ் மற்றும் உபதலைவர் ஸ்ரீ.ராமகிருஷ்ணன் ஸ்வஸ்தி வாசகம் வாசித்தினர்.  

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS