நமஸ்காரம்/ஆசீர்வாதம்.
(அ)
RSS - 100
நம்மில் பலருக்கு நன்கு அறிமுகமான மிகப்பெரும் சேவை ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ் தனது 100வது ஆண்டு சேவையினை பூர்த்தி செய்துள்ளது. ஓர் ஸ்தாபனம் 100 ஆண்டுகள் தொடர்ந்து செயலாற்றுவது மற்றும் சேவைகள் செய்வது என்பது மிகப்பெரிய சாதனை. ஏனெனில் அந்த ஸ்தாபனம் துவக்க காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை எத்தனை விதமான சவால்களை, இடர்பாடுகளை மற்றும் இடையூறுகளை சந்தித்து, கையாண்டு வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது மிகப்பெரிய வரலாறாகும்.
ஸ்தாபக தலைவராக விளங்கிய டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவார்ஜி மற்றும் குருஜி கோல்வால்கர் ஆகியோரது தொலைநோக்கு பார்வையில் உருவாக்கப்பட்டு, பல்வேறு பொறுப்பாளர்கள் மற்றும் தியாக சீலர்களால் தொடர்ந்து திறமையுடன் நடத்தப்பட்டு வருகின்ற ஸ்தாபனம் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். பேரியக்கத்தின் அறிவாக்கத்திலும், ஆதரவிலும் நூற்றுக்கணக்கான முன் இயக்கங்கள் (Front Organisations) பாரதத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு துறைகளில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறைப்படியான நல் சேவைகளை தன்னலமற்ற முறையில் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களைத் தான் சங்க பரிவார் (Sangh Parivar) என்று குறிப்பிடுவார்கள். பாரதத்தில் மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருக்கின்ற பாரதீய ஜனதா கட்சியும் இந்த பட்டியலில் அடங்கிடும். வெளிநாடுகளில் கூட இது போன்ற முன் இயக்கங்கள் அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயலாற்றியும், சேவை செய்தும் வருகின்றன.
அகில உலக அளவில் மிகப்பெரிய சேவை ஸ்தாபனம் என்று பல வெளிநாட்டு ஆய்வாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (RSS), அரிய பெரிய சேவைகளை தொடர்ந்து ஆற்றி இந்தியர்களுக்கெல்லாம் பெருமை சேர்த்து வருகின்றது.
1975ம் ஆண்டு இந்திரா காந்தி அவர்கள் அவசர நிலை பிரகடனம் செய்த போது அனைத்து மாநிலங்களிலும் சேவையாற்றி வந்த ஸ்வயம் சேவகர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் - இன் தியாக வரலாற்றில் இது ஒரு பெரும் அம்சமாகும்.
நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் இயற்கை பேரிடர்களோ (பூகம்பம், நிலச்சரிவு, புயல் மற்றும் பெருவெள்ளம்) அல்லது பெரும் விபத்துக்களோ ஏற்பட்டால், அங்கு உடனடி சென்று சேவை செய்கின்ற தன்னலமற்ற சேவகர்களை கொண்டது ஆர்.எஸ்.எஸ். இந்த பேரியக்கத்தின் சேவைகளை நாம் அனைவரும் பாராட்டி, போற்றி, நன்றி தெரிவித்து மற்றும் ஆதரிக்க வேண்டியது நமது கடமையாகும்.
தேசபக்திக்கும், தன்னலமற்ற சேவைகளுக்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள லட்சக்கணக்கான சுயம் சேவகர்களுக்கு நாம் நமது நன்றி கலந்த வணக்கங்களை, வந்தனங்களை, நமஸ்காரங்களை உரித்தாக்கிடுவோம்.
(ஆ)
12-10-2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் நடைபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு, மாநில செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழு கூட்டங்களை மிகச் சிறப்பாக நடத்திட பெரும் உதவி செய்திட்ட பிராமண சேவா விபூஷண் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவாரி முத்து பட்டர் அவர்களுக்கும், விருதுநகர் மாவட்ட தாம்ப்ராஸ் நிர்வாகிகளுக்கும் மற்றும் விருதுநகர் மாவட்ட தாம்ப்ராஸ் கிளைகளின் நிர்வாகிகளுக்கும், மாநில அமைப்பின் சார்பில் எங்களது பாராட்டினையும் நெஞ்சார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
(இ)
12-10-2025 ஞாயிற்றுக் கிழமை அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் நடைபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்) 45ம் ஆண்டு மாநில சிறப்பு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கீழே கொடுத்துள்ளேன் :
1. கேரள அரசு நியமித்திருக்கினற அடிப்படையில் தமிழகத்திலும் முற்பட்ட சமூகங்களை சார்ந்த நலிந்தோருக்கு உதவிடும் வகையில் ஓர் தனி நல வாரியம் அமைத்திட தமிழக அரசினை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
2. மத்திய அரசு சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ள பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கான (நுறுளு) 10 சதவீத (10ரூ) இட ஒதுக்கீட்டினை தமிழகத்தில் நடைமுறைபடுத்திட தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் முன் வர வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.
3. மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் நடத்தப்படும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு பயன் அளித்திடும் “நவோதயா” பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கிட தேவையான ஒத்துழைப்பினை மத்திய அரசிற்கு வழங்கிடுமாறு தமிழக அரசினை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
4. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தெலுங்கு / கன்னடம் / மலையாளம் / ஹிந்தி / சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களை விருப்பப் பாடமாக (டீயீவiடியேட ளுரதெநஉவ) கற்றுக் கொடுத்திட தமிழக அரசு முன்வந்திட வேண்டும் என்று இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
5. அரசின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள தமிழக கோவில்களை, மேலும் சிறப்பான முறையில் நிர்வகித்து பராமரித்திட உதவிடும் வகையில், அவைகளை ஓர் தன்னாட்சி உரிமை கொண்ட தனி வாரியம் அமைத்து நிர்வகித்திட இப்பொதுக்குழு கோருகின்றது.
6. 2026ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல்களில் எந்த கட்சியினை, அல்லது எந்த கூட்டணியினை ஆதரிப்பது என்கின்ற முடிவினை எடுத்திட மாநிலத் தலைவர் அவர்களுக்கு இப்பொதுக்குழு பரிபூரண அதிகாரம் வழங்குகின்றது.
7. நிலச் சரிவுகளிலும், பெரு மழைப் பொழிவிலும் பாரதத்தின் பல மாநிலங்களில் உயிரிழந்த மக்களுக்கும், தமிழகத்தில் பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்தவர்களுக்கும் மற்றும் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கரூர் கூட்டத்தில் உயிரிழந்த 41 அப்பாவி பொது மக்களுக்கும் இப்பொதுக்குழு அஞ்சலி செலுத்துகின்றது. அவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தினை தெரிவித்துக் கொண்டு அவர்களது ஆன்மாக்கள் நற்கதி அடைந்திட இப்பொதுக்குழு பிரார்த்திக்கின்றது.
தீர்மானங்களின் மீதான தக்க மேல் நடவடிக்கைகளை மாநிலத் தலைமை எடுத்து வருகின்றது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி !
நன்றி !
இங்ஙனம்
உங்கள் அன்பு சகோதரன்
திருவொற்றியூர்
என்.நாராயணன்
மாநிலத் தலைவர்
E-mail : ungalnarayanan@gmail.com
Thambraas State Head Quarters
Whatsapp Numbers : 81480 11172 /
81480 11106 (10.00 am to 6.00 pm)