நமஸ்காரம்.
2025-2030 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினுடைய இயக்கத் தேர்தல்கள் கிளை அளவிலும், மாவட்ட அளவிலும் நடைபெற்று மாநில அளவிலும் நடந்தேறியது.
நமது சங்கத்தின் அமைப்பு தேர்தல்கள் முறைப்படி நடந்திட தக்க நடவடிக்கைகளை எடுத்து அர்ப்பணிப்புடன் செயலாற்றிய மாநில தலைமை தேர்தல் அதிகாரி அம்பத்தூர் ஸ்ரீ.டி.சத்யமூர்த்தி அவர்களுக்கு மாநில பொதுக்குழுவின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
2000 ஆண்டு முதல் சேவையாற்றி வருகின்ற எனக்கு மேலும் 5 ஆண்டுகள் சேவையாற்றிட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பணித்திருக்கின்றனர். தொடர்ந்து என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
25-05-2025 ஞாயிற்றுக் கிழமை அன்று திண்டிவனத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டோம்.
நானும் எனது நிர்வாகக்குழுவினரும் முனைப்புடனும், புது உத்வேகத்துடனும் மற்றும் புதிய யுத்திகளுடனும் சேவையாற்றிட முன் வந்துள்ளோம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழகத்திலும், இதர மாநிலங்களிலும் மற்றும் உலகெங்கும் இருக்கக்கூடிய பிராமண சகோதர சகோதரிகள், 45 ஆண்டுகள் பாரம்பரியமிக்க நமது சங்கத்திற்கு தங்களது உணர்வுபூர்வமான பேராதரவினை தொடர்ந்து நல்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு பெரும் ஆதரவு நல்கிய மாநில துணைத் தலைவர் ஸ்ரீமதி.சுந்தரி ரெங்கநாதன், மாநில அமைப்புச் செயலாளர் திண்டிவனம் ஸ்ரீ.எல்.குமார் மற்றும் இதர நன்கொடையாளர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கீழே கொடுத்துள்ளேன்:
25-05-2025 ஞாயிற்றுக் கிழமை அன்று திண்டிவனத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் (தாம்ப்ராஸ்) மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. மத்திய அரசு சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ள பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கான (EWS) 10 சதவீத (10%) இட ஒதுக்கீட்டினை தமிழக அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று நமக்கு எழுத்து வழியாக தெரிவித்துள்ளது. இந்த முடிவினை தமிழக அரசு மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்றும் நுறுளு 10% இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தி முற்பட்ட சமூகங்களின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களுக்கும் வாய்ப்புகளை வழங்கிட வேண்டும் என்றும் இந்த செயற்குழு மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.
2. மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் நடத்தப்படும் ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு பயன் அளித்திடும் “நவோதயா” பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கிட தேவையான ஒத்துழைப்பினை மத்திய அரசிற்கு வழங்கிடுமாறு தமிழக அரசினை இந்த செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
3. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தெலுங்கு / கன்னடம் / மலையாளம் / ஹிந்தி / சமஸ்கிருதம் ஆகிய மொழிப் பாடங்களை விருப்பப் பாடமாக (டீயீவiடியேட ளுரதெநஉவ) கற்றுக் கொடுத்திட தமிழக அரசு முன்வந்திட வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
4. கேரள அரசு நியமித்திருக்கின்ற அடிப்படையில் தமிழகத்திலும் முற்பட்ட சமூகங்களை சார்ந்த நலிந்தோருக்கு உதவிடும் வகையில் ஓர் தனி நல வாரியம் அமைத்திட தமிழக அரசினை இந்த செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
5. தமிழகத்தில் கஞ்சா மற்றும் இதர போதைப் பொருட்கள் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும், மகளிருக்கு எதிரான வன்முறைகளும், கொலைகளும் அதிகரித்து வருவதனை அன்றாடம் செய்தித் தாள்களில் காண்கின்றோம். சமூக விரோதிகள் பள்ளி/கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்தற்கு அடிமையாக்குவதும் அவர்களை சட்ட விரோத போதை பொருட்களை விநியோகம் செய்திட பயன்படுத்துவதும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகின்றது. எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் கடும் நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக எடுத்து போதை பொருட்கள் நடமாட்டத்தினை முழுவதுமாக தடுத்து நிறுத்திட இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.
6. அரசின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள தமிழக கோவில்களை, மேலும் சிறப்பான முறையில் நிர்வகித்து பராமரித்திட உதவிடும் வகையில், அவைகளை ஓர் தன்னாட்சி உரிமை கொண்ட தனி வாரியம் அமைத்து நிர்வகித்திட இச்செயற்குழு கோருகின்றது. அதற்கான முதல்படியாக தன்னாட்சி வாரியத்திற்கான வழிமுறைகள், நெறிமுறைகள், நிர்வாக அமைப்பு ஆகியவைகளை பரிந்துரை செய்திட ஓர் தக்க நிபுணர் குழுவினை அமைத்து செயல்பட இந்த செயற்குழு வேண்டுகின்றது.
தமிழக ஹிந்துக்களின் நெடுநாளைய இந்த கோரிக்கையினை நிறைவேற்றிக் கொடுத்திட தமிழக அரசு முன்வந்திட வேண்டும் என்று இந்த செயற்குழு வலியுறுத்துகின்றது.
தீர்மானங்களின் மீதான மேல் நடவடிக்கைகளை எடுத்திடுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஜெய்ஹிந்த் !
நன்றி !
இங்ஙனம்
உங்கள் அன்பு சகோதரன்
திருவொற்றியூர்
என்.நாராயணன்
மாநிலத் தலைவர்
E-mail : ungalnarayanan@gmail.com
Thambraas State Head Quarters
Whatsapp Numbers : 81480 11172 /
81480 11106 (10.00 am to 6.00 pm)