|
|
என் கேள்விக்கென்ன பதில் |
|
|
|
முத்தமிழ் முருகர் மாநாட்டினை காணொலியில் துவக்கி வைத்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கருவறையிலும் சமூக நீதி திகழ வேண்டும் என்று கூறி உள்ளாரே ? தாம்ப்ராஸ் கருத்து யாதோ ?
- எஸ்.ராமஸ்வாமி, காரைக்குடி
"திமுகவில் சமூக நீதி எங்குள்ளது. திரு.கருணாநிதி அவர்கள் குடும்பத்தில் தானே உள்ளது. திமுகவிற்கு வேறு எவருமே தலைவராக முடியவில்லையே. திமுக ஆட்சியில் தமிழக முதலமைச்சர் பொறுப்பில் சமூக நீதி எங்குள்ளது. திரு.கருணாநிதி குடும்பத்தில் மட்டும் தானே உள்ளது. இதை எல்லாம் சகித்துக் கொள்ள முடியாமல் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.திருமாவளவன் “ஓர் தலித் தமிழக முதல்வராக முடியாது” என்று அங்கலாய்க்கின்றார். Do What I say; Don’t do what I do (நான் சொல்வதனை செய்; நான் செய்வதனை செய்யாதே). இது தான் மு.க.ஸ்டாலின் அவர்களின் கருத்து.
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பேசுபவர்களே ஜாதி ஒழிப்பு பற்றி பேசுவது மடமை இல்லையா ?
- வி.யக்ஞநாராயணன், மயிலாப்பூர்
"வடிகட்டிய மடமைத்தனம் தான். எவராலும் ஜாதிகளை ஒழிக்க முடியாது. பிராமணர்களையும் ஒன்றும் செய்து விட முடியாது.
தற்போதைய மத்திய அரசு அதிக வரி விதிப்பதாகவும், GSTல் பல குளறுபடிகள் இருப்பதாகவும் சொல்லுவது உண்மையா ?
- Y.தோத்தாத்ரி, ஸ்ரீவைகுண்டம்
"உண்மை தான். ஆனால் மத்திய அரசு விதிக்கின்ற வரியில் மாநில அரசுகளுக்கும் ஓர் பெரும் பங்கு சென்றடைகின்றது. எனவே சில அரசியல் கட்சிகள் மத்திய அரசை குறை சொல்லுவது கட்சி அரசியல் தானே தவிர நியாயமான கருத்தல்ல.
GST வரி விதிப்பு என்பது இந்தியாவில் பிரதமர் மோடி அவர்கள் தலைமையிலான அரசு செய்திட்ட ஓர் மாபெரும் புரட்சி. இதனால் தொழில், வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை வற்புறுத்தப்படுகின்றது. வெளிப்படைத் தன்மையினை கடைப்பிடிக்காத சில தொழிலதிபர்கள் இதனை எதிர்க்கின்றார்கள்.
அதே சமயம் GST வரி விதிப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குளறுபடிகள் உள்ளன. இதனை காலப்போக்கில் தான் சரி செய்திட முடியும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS |
|
|
|
|