"இது ஓர் நல்ல கேள்வி. ஏனென்றால் சமீபத்தில் சங்கத்தில் உறுப்பினரானவர்களுக்கும், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கும் இந்த எண்ணம் தோன்றும். காரணம் வருமாறு:
ஸ்ரீ.சுப்ரமண்ய ஐயர் அவர்களால் துவங்கப்பெற்ற ஹிந்து பத்திரிக்கை ஸ்ரீ.கஸ்தூரி ஐயங்கார் அவர்களால் வாங்கப்பெற்று பல ஆண்டுகள் மிகச் சிறப்பாக தேசிய மற்றும் தெய்வீக நாளிதழாக வெளியிடப்பட்டு வந்தது. பிராமண சமூகத்தினர் தான் ஹிந்து பத்திரிக்கையை பெரும் எண்ணிக்கையில் வாங்கி அதன் வளர்ச்சிக்கு உதவியது வரலாற்று உண்மையாகும்.
மேற்கூறிய காரணத்தினால் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே.ரா அவர்கள் ஹிந்து பத்திரிக்கையினை ‘மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு’ என்று நக்கலடித்தும் மேலும் பார்ப்பன மேலாதிக்க பத்திரிக்கை என்றும் தாக்கி பேசி எழுதி வந்துள்ளார்.
பிராமணர்களின் வீடுகளில் காலையில் காப்பியுடன் வாசிக்கின்ற பத்திரிக்கை ஹிந்து பத்திரிக்கை என்று மிக பிரபலமாக பேசப்பட்டு வந்தது என்பது யாவரும் அறிந்ததே. பிராமண சமூகத்தினர்களால் பெரும்பாலும் வாங்கி ஊக்குவிக்கப்பட்ட பத்திரிக்கை ஹிந்து பத்திரிக்கை. வளர்த்துவிட்ட பிராமணர் சமூகத்தினருக்கு துரோகம் இழைக்கின்ற வகையில் காலப்போக்கில் ஹிந்து பத்திரிக்கை நிர்வாகம் பிராமண எதிர்ப்பு, ஹிந்து எதிர்ப்பு மற்றும் இடது சாரி சிந்தனைகளுக்கும் பச்சையாக துணைபோவது போன்ற செயல்களில் ஈடுபட்டது பிராமணர் சமூகத்தினரிடையே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியது.
1980ல் துவங்கப் பெற்ற நமது தாம்ப்ராஸ் பேரியக்கம் 1990கள் முதல் பெரும் வளர்ச்சி பெறத் துவங்கியது. அந்த காலகட்டங்களில் மாநிலச் செயலாளராகவும், மாநில துணைத் தலைவராகவும் தீவிரமாக செயல்பட்டவர் நமது மாநிலத் தலைவர். அந்த காலகட்டங்கள் முதற்கொண்டு ஹிந்து பத்திரிக்கை தாம்ப்ராஸ் செய்திகளை வெளியிட மறுத்து வந்துள்ளது. மேலும் திராவிடர் கழக செய்திகளை பெரியதாக வெளியிட்டு வந்தனர். வேண்டுகோள் விடுத்தும், எடுத்துச் சொல்லியும், நேரடியாக சென்று உரையாடிய பிறகும் கூட ஹிந்து பத்திரிக்கை நிர்வாகத்தினர் தங்களது அணுகுமுறையினை மாற்றிக் கொள்ளவில்லை.
அப்பொழுது துவங்கியது ஹிந்து பத்திரிக்கைக்கு எதிரான தாம்ப்ராஸ் இயக்கத்தின் எதிர்ப்பு. முதலில் டெக்கான் க்ரானிகல் (னுநஉஉயn ஊhசடிniஉடந) என்கின்ற பத்திரிக்கையினை ஆதரிக்கத் துவங்கினோம். அதன் பிறகு டைம்ஸ் ஆப் இந்தியா (Deccan Chronicle) பத்திரிக்கைக்கு ஆதரவாக தாம்ப்ராஸ் நிர்வாகிகள் செயல்படத் துவங்கினர்.
அதற்கு பிறகு மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழக்கத் துவங்கியது ஹிந்து பத்திரிக்கை. தற்பொழுது சர்க்குலேஷன் குறைந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
Boycot “The Hindu” and buy any other English Newspaper என்கின்ற நமது கோரிக்கையினை தொடர்ந்து வைத்து வருகின்றார் நமது மாநிலத் தலைவர். இதில் அவருக்கு சொந்த விருப்பு/வெறுப்பு எதுவும் இல்லை. பிராமண சமூகத்தினையும், தாம்ப்ராஸ் பேரியக்கத்தினையும் மதிக்காத ஹிந்து பத்திரிக்கையினை நாம் ஏன் வாங்க வேண்டும் என்பது தான் அவரது கேள்வி.