|
|
என் கேள்விக்கென்ன பதில் |
|
|
|
தவெகவின் தேர்தல் வெற்றி தமிழக அரசியலில் என்னென்ன மாற்றத்தை உருவாக்கி உள்ளது அல்லது உருவாக்கிடும் ?
- ஆர்.ரமணி, திருநெல்வேலி
"1967ம் ஆண்டு முதல் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளே ஆண்டு வந்துள்ளன. அமைச்சர்களானாலும், பல அதிகாரிகளானாலும் மிகப்பெரிய லஞ்ச லாவண்யம் மற்றும் ஊழல்களையும் அவர்கள் தொடர்ந்து கொடுத்து வந்தார்கள். தற்போது தமிழக அரசு 10 லட்சம் கோடி ரூபாய் என்கின்ற பெறும் கடனாளியாக ஆகி உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் திராவிடக் கட்சிகளின் வேஷம் கலைந்து விட்டதனைத் தான் காண்பிக்கின்றது. வெறுப்பு அரசியல் செய்த திமுக தோற்றதில் நமக்கெல்லாம் மிக்க சந்தோஷமே. புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு அந்த திராவிடக் கட்சிகளைப் போல் ஆட்சி நடத்திடாமல், மக்கள் நலன் மட்டும் சார்ந்து செயல்படுவார்களா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.
புதிதாக ஆட்சி அமைத்துள்ள திரு.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு ஆறு மாதம் கூட நீடிக்காது என்று சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனரே அப்படி ஆகிடுமா ?
- எஸ்.ஸ்ரீதரன், ஸ்ரீவைகுண்டம்
"நிச்சயமாக ஆகாது. ஏனெனில் எந்த கட்சியும் தமிழகத்தில் உடனடி தேர்தலை சந்திக்க தயாராக இல்லை. Governmental Power is a cementing force. ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதனால் தவெக ஆட்சி நீடிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ஒரு சிலர் தவெக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.விஜய் அவர்கள் கிறிஸ்தவர் என்றும் அவர் கிறிஸ்தவர்களுக்குத் தான் நல்லது செய்வார் என்று சொல்கின்றனரே? இது உண்மையா?
- ஆர்.ரமாமணி, திருவொற்றியூர்
" இந்த உள் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டினை உணர்ந்து கொண்டதால் தான் திரு.விஜய் அவர்கள் தமது பதவி ஏற்பு விழாவில் “நான் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஆகிய 3 (மூன்று) முகங்களாகவும் இருந்திடுவேன்” என்று கூறியுள்ளார். அவர் அனைத்து மக்களின் ஆதரவினை பெற்று தாம் அரசியலில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று எண்ணுவதால், மத அடிப்படையிலான தவறுகளை அவர் இழைத்திட மாட்டார் என்று நம்பிடலாம்.
|
|
|
|
|
|
|
|
|
| |
 |
| Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS |
|
|
| |
|