என் கேள்விக்கென்ன பதில்

சென்னை மெரினா கடற்கரையில் அரசியல் தலைவர்களுக்கான சமாதிகள் அமைத்து ஓர் அற்புதமான கடற்கரையினை கல்லறை போல் ஆக்கி வைத்துள்ளனரே! இதனை சரி செய்ய முடியாதா?

- கே.விஷ்ணுமோஹன், தர்மபுரி


"மக்களை மதிக்கின்ற தன்மையும், நியாய உணர்வும், தெளிவும் மற்றும் துணிவும் கொண்டுள்ள ஓர் எதிர்கால தமிழ்நாடு அரசு நிச்சயமாக இந்த சமாதிகளை அங்கிருந்து இடம் மாற்றி விடும் என்று நம்பி இருந்திடுவோம்.


தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர் ஆங்கில “ஹிந்து” பத்திரிக்கையினை வாங்காதீர்கள் என்று அடிக்கடி கூட்டங்களில் சொல்லி வருவதன் காரணம் என்னவோ ?


"இது ஓர் நல்ல கேள்வி. ஏனென்றால் சமீபத்தில் சங்கத்தில் உறுப்பினரானவர்களுக்கும், புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களுக்கும் இந்த எண்ணம் தோன்றும். காரணம் வருமாறு:

ஸ்ரீ.சுப்ரமண்ய ஐயர் அவர்களால் துவங்கப்பெற்ற ஹிந்து பத்திரிக்கை ஸ்ரீ.கஸ்தூரி ஐயங்கார் அவர்களால் வாங்கப்பெற்று பல ஆண்டுகள் மிகச் சிறப்பாக தேசிய மற்றும் தெய்வீக நாளிதழாக வெளியிடப்பட்டு வந்தது. பிராமண சமூகத்தினர் தான் ஹிந்து பத்திரிக்கையை பெரும் எண்ணிக்கையில் வாங்கி அதன் வளர்ச்சிக்கு உதவியது வரலாற்று உண்மையாகும்.

மேற்கூறிய காரணத்தினால் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே.ரா அவர்கள் ஹிந்து பத்திரிக்கையினை ‘மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு’ என்று நக்கலடித்தும் மேலும் பார்ப்பன மேலாதிக்க பத்திரிக்கை என்றும் தாக்கி பேசி எழுதி வந்துள்ளார். பிராமணர்களின் வீடுகளில் காலையில் காப்பியுடன் வாசிக்கின்ற பத்திரிக்கை ஹிந்து பத்திரிக்கை என்று மிக பிரபலமாக பேசப்பட்டு வந்தது என்பது யாவரும் அறிந்ததே. பிராமண சமூகத்தினர்களால் பெரும்பாலும் வாங்கி ஊக்குவிக்கப்பட்ட பத்திரிக்கை ஹிந்து பத்திரிக்கை. வளர்த்துவிட்ட பிராமணர் சமூகத்தினருக்கு துரோகம் இழைக்கின்ற வகையில் காலப்போக்கில் ஹிந்து பத்திரிக்கை நிர்வாகம் பிராமண எதிர்ப்பு, ஹிந்து எதிர்ப்பு மற்றும் இடது சாரி சிந்தனைகளுக்கும் பச்சையாக துணைபோவது போன்ற செயல்களில் ஈடுபட்டது பிராமணர் சமூகத்தினரிடையே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியது.

1980ல் துவங்கப் பெற்ற நமது தாம்ப்ராஸ் பேரியக்கம் 1990கள் முதல் பெரும் வளர்ச்சி பெறத் துவங்கியது. அந்த காலகட்டங்களில் மாநிலச் செயலாளராகவும், மாநில துணைத் தலைவராகவும் தீவிரமாக செயல்பட்டவர் நமது மாநிலத் தலைவர். அந்த காலகட்டங்கள் முதற்கொண்டு ஹிந்து பத்திரிக்கை தாம்ப்ராஸ் செய்திகளை வெளியிட மறுத்து வந்துள்ளது. மேலும் திராவிடர் கழக செய்திகளை பெரியதாக வெளியிட்டு வந்தனர். வேண்டுகோள் விடுத்தும், எடுத்துச் சொல்லியும், நேரடியாக சென்று உரையாடிய பிறகும் கூட ஹிந்து பத்திரிக்கை நிர்வாகத்தினர் தங்களது அணுகுமுறையினை மாற்றிக் கொள்ளவில்லை.

அப்பொழுது துவங்கியது ஹிந்து பத்திரிக்கைக்கு எதிரான தாம்ப்ராஸ் இயக்கத்தின் எதிர்ப்பு. முதலில் டெக்கான் க்ரானிகல் (னுநஉஉயn ஊhசடிniஉடந) என்கின்ற பத்திரிக்கையினை ஆதரிக்கத் துவங்கினோம். அதன் பிறகு டைம்ஸ் ஆப் இந்தியா (Deccan Chronicle) பத்திரிக்கைக்கு ஆதரவாக தாம்ப்ராஸ் நிர்வாகிகள் செயல்படத் துவங்கினர்.

அதற்கு பிறகு மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழக்கத் துவங்கியது ஹிந்து பத்திரிக்கை. தற்பொழுது சர்க்குலேஷன் குறைந்து அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

Boycot “The Hindu” and buy any other English Newspaper என்கின்ற நமது கோரிக்கையினை தொடர்ந்து வைத்து வருகின்றார் நமது மாநிலத் தலைவர். இதில் அவருக்கு சொந்த விருப்பு/வெறுப்பு எதுவும் இல்லை. பிராமண சமூகத்தினையும், தாம்ப்ராஸ் பேரியக்கத்தினையும் மதிக்காத ஹிந்து பத்திரிக்கையினை நாம் ஏன் வாங்க வேண்டும் என்பது தான் அவரது கேள்வி.


இந்தியாவினுடைய பிரதமர்களில் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய முதன்மை மூன்று பிரதமர்களாக எவர்களைச் சொல்லலாம் ?

- கே.ராமநாதன், ஹரூர்


"சுதந்திரம் பெற்ற பிறகு முதலாவது இந்திய பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள், பல தவறான முடிவுகளை எடுத்திருந்தாலும் நினைவில் கொள்ளக் கூடிய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மற்றும் உலகம் போற்றும் பாரதப் பிரதமராக பாரதத்தின் மதிப்பினை உலகளவில் உயர்த்திய மற்றும் உயர்த்தி வருகின்ற நரேந்திர மோடி அவர்கள். இந்த மூன்று பிரதமர்கள் தான் வரலாற்றில் சிறப்பான இடம் பிடித்து ஆவணப்படுத்தப்படுவர். மற்ற பிரதமர்களும் பல நற்செயல்களை செய்துள்ளதனை நாம் மறுத்திட முடியாது. பிரபலமான அடிப்படையில் எவ்வாறு செயல்பட்டனர் என்கின்ற கோணத்தில் இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாரத பிரதமர்களான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கொலை செய்யப்பட்டது இந்திய விரோதிகளால் என்பதனால் அவர்களின் தியாகத்தினையும் நாம் போற்றிட வேண்டும். வரலாறும் மறந்திடாது.

Youtube Channel
Subscribe
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS